பதிவு செய்த நாள்
29 ஏப்2020
23:34
புதுடில்லி : அனைத்து மட்டங்களிலும் நெருக்கடியான இந்த நிலையில், நிறுவனங்கள் தங்களின் ஊதியம் வழங்கும் திறனை மறுபரிசீலனை செய்து கொள்வது அவசியம் என, டெலாய்ட் நிறுவன ஆய்வு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், நோய் தொற்று பரவல் காரணமாக, நிறுவனங்களின் வருவாய், 30 சதவீதம் அளவுக்கு சரியும்பட்சத்தில், தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள, 100 நிறுவனங்களில், 27 நிறுவனங்களால், அவற்றின் தற்போதைய பட்ஜெட்டின்படி ஊதியம் வழங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து, 100 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஆய்வை மேற்கொண்ட டெலாய்ட், மேலும் தெரிவித்துள்ளதாவது:ஆய்வில், 27 நிறுவனங்கள், வருவாய், 30 சதவீதம் அளவுக்கு குறையும்பட்சத்தில், தற்போதைய அளவுக்கு ஊதியம் வழங்க இயலாது என தெரிவித்து உள்ளன.
வருவாய் மேலும் குறையும்பட்சத்தில், பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளன.இந்த, 27 நிறுவனங்களில், 11 நிறுவனங்களால், ஊதியம் வழங்குவதற்காக கடன் கூட வாங்க முடியாத நிலையில் இருக்கின்றன.இவற்றின் கடனுக்கும் பங்குக்குமான விகிதம் ஒன்று என்பதைவிட அதிகமாக இருப்பதால், அவற்றுக்கு கடன் கிடைப்பது சிரமம்.சுற்றுலா, பொழுதுபோக்கு ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் வருவாய், கிட்டத்தட்ட, பூஜ்ஜியம் என்ற நிலையிலும், அவற்றுக்கான நடைமுறை செலவுகள், ரொக்க லாபத்தை எதிர்மறை நிலைக்கு கொண்டு செல்வதாக இருக்கிறது.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|