முக கவச வினியோகத்தில்  இந்திய அஞ்சல் நிறுவனம் முக கவச வினியோகத்தில் இந்திய அஞ்சல் நிறுவனம் ...  மருந்து நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., சலுகை மருந்து நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., சலுகை ...
ஊதிய சிக்கலில் சிக்கியிருக்கும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2020
23:34

புதுடில்லி : அனைத்து மட்டங்களிலும் நெருக்கடியான இந்த நிலையில், நிறுவனங்கள் தங்களின் ஊதியம் வழங்கும் திறனை மறுபரிசீலனை செய்து கொள்வது அவசியம் என, டெலாய்ட் நிறுவன ஆய்வு அறிவுறுத்தி உள்ளது.

மேலும், நோய் தொற்று பரவல் காரணமாக, நிறுவனங்களின் வருவாய், 30 சதவீதம் அளவுக்கு சரியும்பட்சத்தில், தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள, 100 நிறுவனங்களில், 27 நிறுவனங்களால், அவற்றின் தற்போதைய பட்ஜெட்டின்படி ஊதியம் வழங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து, 100 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஆய்வை மேற்கொண்ட டெலாய்ட், மேலும் தெரிவித்துள்ளதாவது:ஆய்வில், 27 நிறுவனங்கள், வருவாய், 30 சதவீதம் அளவுக்கு குறையும்பட்சத்தில், தற்போதைய அளவுக்கு ஊதியம் வழங்க இயலாது என தெரிவித்து உள்ளன.

வருவாய் மேலும் குறையும்பட்சத்தில், பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளன.இந்த, 27 நிறுவனங்களில், 11 நிறுவனங்களால், ஊதியம் வழங்குவதற்காக கடன் கூட வாங்க முடியாத நிலையில் இருக்கின்றன.இவற்றின் கடனுக்கும் பங்குக்குமான விகிதம் ஒன்று என்பதைவிட அதிகமாக இருப்பதால், அவற்றுக்கு கடன் கிடைப்பது சிரமம்.சுற்றுலா, பொழுதுபோக்கு ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் வருவாய், கிட்டத்தட்ட, பூஜ்ஜியம் என்ற நிலையிலும், அவற்றுக்கான நடைமுறை செலவுகள், ரொக்க லாபத்தை எதிர்மறை நிலைக்கு கொண்டு செல்வதாக இருக்கிறது.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)