பதிவு செய்த நாள்
01 மே2020
01:35
புதுடில்லி : கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சி, 6.5 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நாடு முடக்கப்பட்ட நிலையில், அதன் காரண மாக, கச்சா எண்ணெய், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளில், உற்பத்தி கடுமையாக சரிந்ததை அடுத்து, நாட்டின் முக்கிய, 8 துறைகளின் வளர்ச்சி, 6.5 சதவீதம் குறைந்துள்ளது.கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை, முக்கிய எட்டு துறைகளாக குறிப்பிடப்படுகின்றன.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இந்த முக்கிய எட்டு துறைகளும், 5.8 சதவீதம் வளர்ச்சியை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி முறையே, 5.5 சதவீதம், 15.2 சதவீதம், 0.5 சதவீதம் என, சரிவை கண்டுள்ளன.மேலும் உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி வளர்ச்சி, முறையே, 11.9 சதவீதம், 13 சதவீதம், 24.7 சதவீதம், 7.2 சதவீதம் என, சரிவைக் கண்டுள்ளன.நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆண்டு மார்ச்சில், 9.1 சதவீதமாக இருந்தது.
இந்த ஆண்டு மார்ச்சில், 4.1 சதவீதமாக குறைந்துவிட்டது.ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டில், முக்கிய துறைகளின் வளர்ச்சி, 0.6 சதவீதமாக குறைந்துவிட்டது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், 4.4 சதவீதமாக வளர்ச்சியை கண்டிருந்தது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|