மருந்து நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., சலுகை மருந்து நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., சலுகை ...  ஆபரண தங்கத்தின் தேவை 41 சதவீதம் சரிந்தது ஆபரண தங்கத்தின் தேவை 41 சதவீதம் சரிந்தது ...
முக்கிய 8 துறைகள் வளர்ச்சி மார்ச்சில் 6.5 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2020
01:35

புதுடில்லி : கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சி, 6.5 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நாடு முடக்கப்பட்ட நிலையில், அதன் காரண மாக, கச்சா எண்ணெய், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளில், உற்பத்தி கடுமையாக சரிந்ததை அடுத்து, நாட்டின் முக்கிய, 8 துறைகளின் வளர்ச்சி, 6.5 சதவீதம் குறைந்துள்ளது.கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை, முக்கிய எட்டு துறைகளாக குறிப்பிடப்படுகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இந்த முக்கிய எட்டு துறைகளும், 5.8 சதவீதம் வளர்ச்சியை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி முறையே, 5.5 சதவீதம், 15.2 சதவீதம், 0.5 சதவீதம் என, சரிவை கண்டுள்ளன.மேலும் உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி வளர்ச்சி, முறையே, 11.9 சதவீதம், 13 சதவீதம், 24.7 சதவீதம், 7.2 சதவீதம் என, சரிவைக் கண்டுள்ளன.நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆண்டு மார்ச்சில், 9.1 சதவீதமாக இருந்தது.

இந்த ஆண்டு மார்ச்சில், 4.1 சதவீதமாக குறைந்துவிட்டது.ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டில், முக்கிய துறைகளின் வளர்ச்சி, 0.6 சதவீதமாக குறைந்துவிட்டது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், 4.4 சதவீதமாக வளர்ச்சியை கண்டிருந்தது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)