பதிவு செய்த நாள்
02 மே2020
23:09
மும்பை:தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து, விரைவில், தேசிய அளவில் மின்னணு வர்த்தகத்துக்காக, ’பாரத்மார்க்கெட்’ எனும் தளத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக, இந்திய வணிகர்கள் கூட்டமைப்பான, சி.ஏ.ஐ.டி., தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த கூட்டமைப்பின் செகரட்டரி ஜெனரல் பிரவீன் கந்தல்வால் கூறியுள்ளதாவது:பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களை ஒருங்கிணைத்து, பொருட்களை நுகர்வோரின் வீட்டுக்கே வினியோகிக்கும் வகையில், மின்னணு தளத்தை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதில் தேசிய அளவில் சில்லரை வணிகர்களும் இடம் பெறுவர்.இந்த
தளத்தில், 95 சதவீத சில்லரை வணிகர்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம். அவர்கள் இந்த தளத்தை பயன்படுத்திக் கொள்வதோடு, அவர்களும் பங்குதாரர்களாக இருப்பார்கள். இந்த தளம் வணிகர்களாலேயே நடத்தப்படும்.
ஏற்கனவே, ஆறு நகரங்களில் இந்த சேவைக்கான வெள்ளோட்டத்தை துவக்கி விட்டோம். இதற்கு வாடிக்கையாளர்களில் ஆரம்பித்து அனைத்து தரப்பினரிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|