தொற்று நோயால் துவளும் இந்திய ஓட்டல் துறைதொற்று நோயால் துவளும் இந்திய ஓட்டல் துறை ...  ரூ.15 ஆயிரம் கோடி இழப்பை செய்தித்தாள் துறை சந்திக்கும் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பை செய்தித்தாள் துறை சந்திக்கும் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மறக்க வேண்டிய மாதம் ஏப்ரல் வாகன முகவர்கள் வருத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2020
23:13

புது­டில்லி:’ஏப்­ரல் மாதம் மறக்க வேண்­டிய மாதம்; மீண்­டும் வணி­கத்தை துவங்­கு­வது குறித்து எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்’ என, வாகன முக­வர்­கள் கூட்­ட­மைப்­பான, எப்.ஏ.டி.ஏ., தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஏப்­ரல் மாதத்­தில், வாகன விற்­பனை, கிட்­டத்­தட்ட பூஜ்­ஜி­யம் என்ற நிலைக்கு சென்­று­ விட்­டது. வாகன விற்­பனை வர­லாற்­றில் இது ஒரு எதிர்­பா­ராத சம்­ப­வம். இதற்கு முன் இப்­படி ஒரு நிலையை வாகன துறை­யினர் சந்­தித்­த­தில்லை.கொரோனா நோய் தொற்று கார­ண­மாக, நாடு முடக்­கப்­பட, அத்­து­டன் சேர்ந்து, ஏப்­ரல் மாதத்­தில் வாகன விற்­ப­னை­யும் மொத்­த­மாக முடங்கி போய்­விட்­டது.


மேலும், 17ம் தேதி வரை தடை நீட்டிக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில், நிலைமை சீரா­வ­தற்­கான வாய்ப்­பு­களும் தள்­ளிப் போயுள்­ளது. இது குறித்து, இச்­சங்­கத்­தின் தலை­வர் அஷிஷ் ஹர்­ஷ­ராஜ் கேல் கூறி­யுள்­ள­தா­வது:ஒட்­டு­மொத்த வாகன துறை­யும் மறக்க வேண்­டிய மாதம், ஏப்­ரல் மாத­மா­கும். இது போன்ற ஒரு நிலை, இனி எதிர்­கா­லத்­தில் வரக்­கூ­டாது என்று வேண்­டு­கி­றோம்.


ஒரு­வரை ஒரு­வர் சார்ந்­தி­ருக்­கும் இந்த துறை­யில், மீண்­டும் வணி­கத்தை துவக்க, அனை­வ­ரும் இணைந்து செய­லாற்ற வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.இந்த தடை காலத்­தில், தயா­ரிப்­பா­ளர்­களில் துவங்கி, முக­வர்­கள், பாகங்­கள் தயா­ரிப்­ப­வர்­கள் வரை அனை­வ­ரும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றோம்.ஒரு­வரை ஒரு­வர் சார்ந்­தி­ருக்­கும் நிலை­யில், தடை காலத்­தில் யார் பாதிப்­புக்­குள்­ளா­னா­லும், ஒட்­டு­ மொத்த அமைப்­புமே பாதிப்­புக்­குள்­ளாகி விடும்.

முத­லில் சந்­தை­யில் தேவை எந்த அள­வுக்கு உள்­ளது என்­பதை அறிந்து­கொள்ள வேண்­டும். ஆனா­லும், குறிப்­பி­டத்­தக்க வகை­யில், தேவை குறை­வா­கவே இருக்­கும் என்றே
எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.தடை நீக்­கத்­துக்­கு பின், தேவை­கள் அதி­க­ரிப்­ப­தற்கு அர­சின் ஆத­ரவு தேவை.ஜி.எஸ்.டி.,யை குறைப்பது, வங்கி, வங்கி சாரா நிதி­ய­மைப்­பு­கள் ஆகி­ய­வற்­றின் வட்­டியை குறைப்­பது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள், இத்­துறை மீண்­டும் துளிர்க்க உத­வி­கர­மாக இருக்­கும்.

மேலும், நீண்ட கால­மாக காத்­தி­ருக்­கும் பழைய வாக­னங்­களை, சாலை பயன்­பாட்­டில் இருந்து அகற்ற, ஊக்­கச் சலு­கை­கள் வழங்­கு­வது குறித்த கொள்கை அறிவிப்பை வெளி­யி­டு­வ­தும்
உத­வி­க­ர­மாக இருக்­கும்.மேலும், வாகன துறையை, அத்­தி­யா­வ­சிய பொருட்­கள் பட்­டி­ய­லில் சேர்ப்­ப­தன் மூலம், வங்­கி­கள் ஒதுக்­கும் நிதி உத­வி­யில் ஒரு பகு­தியை, இந்த துறைக்கு ஒதுக்க வாய்ப்பு கிடைக்­கும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)