பதிவு செய்த நாள்
03 மே2020
22:55
வங்கிகள், கொரோனா சூழலை எதிர்கொள்வதற்கு பிரத்யேகமாக வழங்கும்
கோவிட்- – 19 தனிநபர் கடன் வசதி உங்களுக்கு ஏற்றதா என சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
‘பர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன் வசதி வாழ்வியல் தேவைக்காக நாடப்படுகிறது.
தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகம் என்றாலும், அதிக காகித பணிகள் இல்லாமல் எளிதாக கிடைக்க கூடியது என்பது, இதன் சாதகமான அம்சமாக கருதப்படுகிறது. தற்போது கொரோனா பொருளாதார நோக்கில் பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கும் நிலையில்,
பல்வேறு வங்கிகள், கோவிட்- – 19சூழலுக்கான பிரத்யேக தனிநபர் கடன் வசதியை அளிக்கத் துவங்கிஉள்ளன.
தற்போதைய சூழலில் ஏற்பட்டு இருக்கும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள, இந்த கடன் வசதி நிச்சயம் கைகொடுக்கும். எனினும், இது தொடர்பான பல்வேறு அம்சங்களை பரிசீலித்து முடிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.
சம்பள கணக்கு
பொதுவாக தனிநபர் கடன் வசதியை அனைவரும் நாடலாம். கோவிட்- – 19 தனிநபர் கடன் வசதி, வங்கிகளால் ஏற்கனவே சம்பள கணக்கு அல்லது வீட்டு கடன் / வாகன கடன் கணக்கு
வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் அதிக கிரெடிட் ஸ்கோரும் பெற்றிருக்க வேண்டும். கடன் தவணை பாக்கி வைத்திருக்காமல் இருக்க வேண்டும். இத்தகைய வாடிக்கையாளர்களுக்கு, கடன் வழங்கப்படும்.பெரும்பாலான வங்கிகள், 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகின்றன.
இவற்றுக்கு செயல்முறை கட்டணம் போன்றவையில் சலுகை அளிக்கப்படலாம். வட்டி விகிதமும் குறைவாக இருக்கலாம். கடனுக்கான காலம் மூன்று முதல்,ஐந்தாண்டுகள் வரை இருக்கலாம்.முதல் சில மாதங்களுக்கு,கடன் தவணையில் வட்டி மட்டும் செலுத்தும்
சலுகையும் வழங்கப்படலாம். முன்கூட்டியே செலுத்தினால் அபராதம் கிடையாது. இதற்கான நிபந்தனைகளும், சலுகைகளும்வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.
கவனம் தேவை
குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் என்பது ஈர்க்க கூடிய அம்சம் தான். ஆனால்,
தற்போதைய சூழலில் கூடுதல் கடன் பெறுவதற்கு முன், தொடர்புடைய அம்சங்களை
கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.இந்த நிலையில், கையில் அதிக பணம் இருக்கும் எண்ணத்தை
உண்டாக்கி, வீண் செலவில் ஈடுபட வைக்கலாம். நிதி தேவை உள்ளவர்கள், அவசர கால நிதியை பயன்படுத்திக்கொள்வதே சரியாக இருக்கும்.
மேலும் லாக்டவுன் காலத்தில், வெளியே செல்வது மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த
செலவுகள் குறைந்திருக்கும். இப்படி மிச்சமாகும் தொகையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தேவை எனில் வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள உபரி தொகையை
எடுத்துக்கொள்ளலாம். அதையும் மீறி பணம் தேவைப்பட்டால்,முதலீடுகளில் ஒரு பகுதியை விலக்கிக் கொள்வது அல்லது முதலீட்டின் மீது கடன் பெறும் வாய்ப்பை பரிசீலிக்கலாம்.
முதலீடு தரும் பலனை விட, கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருந்தால் கடன்
வசதியை நாடலாம். சுலபமாக கிடைக்கிறதே என்பதற்காக, கடன் வசதியை நாடுவதை தவிர்ப்பது நல்லது.தற்போதைய சூழல், தேவைகள் மற்றும் நிதி நிலை அடிப்படையில்
தீர்மானிக்க வேண்டும். உடனடிநலனை மட்டும் பார்க்காமல், எதிர்காலத்தில் சுமையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|