பதிவு செய்த நாள்
03 மே2020
23:00
தற்போதைய சூழல் மட்டும் அல்ல, இனி வரும் மாதங்களிலும் அவசர கால நிதியின்
அவசியத்தை உணரலாம். எதிர்பாராத நெருக்கடியை சமாளிக்க, அவசர கால
நிதியை
உருவாக்கி கொள்வது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.
இத்தகைய நிதி கையில்
இருந்தால், அத்தியாவசிய செலவுகள் குறித்து கவலை
இல்லாமல் மற்ற விஷயங்களை
கவனிக்கலாம். சரி,இந்த வகை நிதியை பராமரிப்பதற்கான வழிகளை பார்க்கலாம்:
பலனும், பாதுகாப்பும்:
ஆறு மாத கால அத்தியாவசிய தேவைக்கான தொகை, அவசர கால நிதியாக கையில்
இருப்பது நல்லது.இந்த வகை நிதியை முதலீடு செய்வது என வரும் போது,பலனைவிட
பாதுகாப்பு அம்சமே முக்கியம். அதே நேரத்தில் தேவைப்படும் போது, உடனே
எடுத்துக்கொள்ளும் வசதியும் இருக்க வேண்டும்.
லிக்விட் பண்டுகள்:
அவசர கால நிதியை முதலீடு செய்ய, லிக்விட்பண்டுகள்
மிகவும் ஏற்றது என கருதப்படுகிறது. மியூச்சுவல் பண்டு வகையைச்
சேர்ந்த லிக்விட் பண்டுகள், டெப்ட் பண்ட் கீழ் வருகின்றன. இவை,
குறுகிய கால பத்திரங்களில் முதலீடுசெய்பவை. தற்போது டெப்ட் பண்டுகள்
சிக்கலுக்குஉள்ளாகியுள்ளதால், லிக்விட் பண்ட் ஏற்றதா என கேள்வி எழலாம்.
நீண்ட
கால நோக்கு:
அவசர கால நிதிக்கு பணமாக்கும் தன்மை அவசியம்
என்றாலும், இவை எல்லா
நேரங்களிலும் தேவைப்படாது. எனவே, பணமாக்கும்
தன்மைக்கு பாதிப்பில்லாமல் இதை முதலீடு செய்வது நல்லது. லிக்விட்
பண்ட் இதற்குபொருத்தமாக இருக்கும். குறுகிய கால நிகழ்வுகளை விட,நீண்ட கால நோக்கில் அணுக வேண்டும்.
சரியான வழி:
அவசர கால நிதியை ஒரே இடத்தில் முதலீடுசெய்வதை விட, பிரித்தளிக்கும் உத்தியை கடைப்பிடிக்கலாம். ஒரு தொகையை ரொக்கமாக வீட்டில் வைத்திருக்கலாம்.இன்னொரு
பகுதியை வைப்பு நிதிக்கு மாற்றும் வசதி கொண்ட வங்கி சேமிப்பு கணக்கிலும், எஞ்சிய தொகையை லிக்விட்பண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.
ஏற்ற
இறக்கம்:
அண்மை காலத்தில் லிக்விட் பண்டுகள் அளிக்கும் பலன்
குறைந்துள்ளது. கொரோனா
சூழலில் பத்திர சந்தையில் ஏற்ற இறக்கும்
தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குறைந்தபட்சம்,
30 நாட்கள் முதலீட்டில் இருந்தால் ஏற்றஇறக்கத்தை எதிர்கொள்ளலாம்
என்கின்றனர். அடிப்படைஅம்சங்களை பரிசீலித்து முதலீடு செய்யலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|