'டிஜிட்டல்' மயமாகும் மளிகை கடைகள்'டிஜிட்டல்' மயமாகும் மளிகை கடைகள் ... காப்பீடு பெற எளிய கே.ஒய்.சி., செயல்முறை காப்பீடு பெற எளிய கே.ஒய்.சி., செயல்முறை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அவ­சர கால நிதி சிறப்­பாக பரா­ம­ரிப்­பது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2020
23:00

தற்­போ­தைய சூழல் மட்­டும் அல்ல, இனி வரும் மாதங்­க­ளி­லும் அவ­சர கால நிதி­யின் அவ­சி­யத்தை உண­ர­லாம். எதிர்­பா­ராத நெருக்­க­டியை சமா­ளிக்க, அவ­சர கால நிதியை
உரு­வாக்கி கொள்­வது அவ­சி­யம் என வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது. இத்­த­கைய நிதி கையில்
இருந்­தால், அத்தியாவசிய செல­வு­கள் குறித்து கவலை இல்­லா­மல் மற்ற விஷ­யங்­களை
கவ­னிக்­க­லாம். சரி,இந்த வகை நிதியை பரா­ம­ரிப்­ப­தற்­கான வழி­களை பார்க்­க­லாம்:


பல­னும், பாது­காப்­பும்:


ஆறு மாத கால அத்­தி­யா­வசிய தேவைக்­கான தொகை, அவ­சர கால நிதி­யாக கையில்
இருப்­பது நல்­லது.இந்த வகை நிதியை முத­லீடு செய்­வது என வரும் போது,பல­னை­விட பாது­காப்பு அம்­சமே முக்­கி­யம். அதே நேரத்­தில் தேவைப்­படும் போது, உடனே எடுத்­துக்­கொள்­ளும் வச­தி­யும் இருக்க வேண்­டும்.


லிக்­விட் பண்­டு­கள்:


அவ­சர கால நிதியை முத­லீடு செய்ய, லிக்­விட்பண்­டு­கள் மிக­வும் ஏற்­றது என கரு­தப்­ப­டு­கிறது. மியூச்­சு­வல் பண்டு வகை­யைச்­ சேர்ந்த லிக்­விட் பண்­டு­கள், டெப்ட் பண்ட் கீழ் வரு­கின்­றன. இவை, குறு­கிய கால பத்­தி­ரங்­களில் முத­லீடுசெய்­பவை. தற்­போது டெப்ட் பண்­டு­கள்
சிக்­க­லுக்குஉள்­ளா­கி­யுள்­ள­தால், லிக்­விட் பண்ட் ஏற்­றதா என கேள்வி எழ­லாம்.



நீண்ட கால நோக்கு:


அவ­சர கால நிதிக்கு பண­மாக்­கும் தன்மை அவ­சி­யம் என்­றா­லும், இவை எல்லா
நேரங்­க­ளி­லும் தேவைப்­படாது. எனவே, பண­மாக்­கும் தன்­மைக்கு பாதிப்­பில்­லா­மல் இதை முத­லீடு செய்­வது நல்­லது. லிக்­விட் பண்ட் இதற்குபொருத்­த­மாக இருக்­கும். குறு­கிய கால நிகழ்­வு­களை விட,நீண்ட கால நோக்­கில் அணுக வேண்­டும்.

சரி­யான வழி:


அவ­சர கால நிதியை ஒரே இடத்­தில் முத­லீடுசெய்­வதை விட, பிரித்­த­ளிக்­கும் உத்­தியை கடைப்­பி­டிக்­க­லாம். ஒரு தொகையை ரொக்­க­மாக வீட்­டில் வைத்­தி­ருக்­க­லாம்.இன்­னொரு
பகு­தியை வைப்பு நிதிக்கு மாற்­றும் வசதி கொண்ட வங்கி சேமிப்பு கணக்­கி­லும், எஞ்­சிய தொகையை லிக்­விட்பண்­டு­க­ளி­லும் முத­லீடு செய்­ய­லாம்.


ஏற்ற இறக்­கம்:


அண்மை காலத்­தில் லிக்­விட் பண்டு­கள் அளிக்­கும் பலன் குறைந்­துள்­ளது. கொரோனா
சூழ­லில் பத்­திர சந்­தை­யில் ஏற்ற இறக்­கும் தொட­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. எனி­னும், குறைந்­த­பட்­சம், 30 நாட்­கள் முத­லீட்­டில் இருந்­தால் ஏற்றஇறக்­கத்தை எதிர்­கொள்­ள­லாம்
என்­கின்­ற­னர். அடிப்­படைஅம்­சங்­களை பரி­சீ­லித்து முத­லீடு செய்­ய­லாம்.



Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)