பதிவு செய்த நாள்
03 மே2020
23:02
ஆயுள் காப்பீடு பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், எளிய முறையில் கே.ஒய்.சி., நடைமுறையை ஆதார் எண்ணை சமர்ப்பித்து இ-கே.ஒய்.சி., முறையில் பூர்த்தி செய்ய, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
காப்பீடு
பெறும் போது, ‘நோ யுவர் கஸ்டமர்’ எனப்படும் கே.ஒய்.சி., செயல்முறையை
நிறைவேற்ற வேண்டும். பொதுவாக இதற்கு நிறைய ஆவணங்களை சமர்ப்பிக்க
வேண்டும்.தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுதும்,
‘லாக்டவுன்’ நிலவும் சூழலில், இந்த செயல்முறையை காகிதம் இல்லாமல்
நிறைவேற்றும் வகையில், காப்பீடு நிறுவனங்கள் பாலிசிதாரர்களின்
கே.ஒய்.சி., நடைமுறையை ஆதார் எண் அடையாளம் கொண்டு
நிறைவேற்றிக்கொள்ள, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
வழங்கியுள்ளது.
காப்பீடு பெற விரும்பும் பொதுமக்கள், கே.ஒய்.சி.,
நடைமுறையை எளிதாக பூர்த்தி செய்ய, காப்பீடு நிறுவனங்கள், ஆதார் எண்
அடையாளத்தை அணுக அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளதாகவும்,இதற்கு
மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் ஆணையம்
தெரிவித்து உள்ளது.லாக்டவுன் காலத்தில் பொதுமக்கள் பாலிசி பெறுவதை இது எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் காகிதவடிவில் ஆவணங்களைசமர்ப்பிக்க வேண்டாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|