'ஜியோ'வில் குவியும் முதலீடு 'பேஸ்புக்'கை அடுத்து, 'சில்வர்லேக்' 'ஜியோ'வில் குவியும் முதலீடு 'பேஸ்புக்'கை அடுத்து, 'சில்வர்லேக்' ...  தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி சரிவுஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத வீழ்ச்சி தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி சரிவுஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத ... ...
பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு ‘பெல்’ நிறுவனம் அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2020
22:40

புதுடில்லி:பொதுத் துறை நிறுவனமான, ’பெல்’, இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்ளும்படி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, பெல் நிறுவனத்தின் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும்படியும் அழைப்பு விடுத்துள்ளது.


தொற்று நோய் பாதிப்புகளை அடுத்து, பல பன்னாட்டு நிறுவனங்கள், சீனாவை விட்டு வெளியேறி, வேறு இடங்களில் தயாரிப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், ‘பெல்’ இத்தகைய அழைப்பை விடுத்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கவும், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தயாரிப்பை துவங்குவதற்கு ஆதரவளிக்கும் வகையிலும், பெல் நிறுவனம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.


கொரோனா பாதிப்பை அடுத்து, நிறுவனங்கள் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தங்கள் உற்பத்தியை தொடர்வதில் இருக்கும் ஆபத்தையும், பல முனை வினியோகத்தின் பலனையும் உணர்ந்துள்ளன. இது, இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். வேகமாக வளரும் பொருளாதாரம், முதலீட்டுக்கு ஏற்ற நாடு, ஜனநாயக அரசு, சிறப்பான நீதி பரிபாலன அமைப்பு, உழைப்பதற்கான இளைஞர்கள், போன்றவை இந்தியாவில் இருப்பதால், வெளிநாட்டு நிறுவனங்களை எளிதில் ஈர்க்க முடியும்.

பெல் நிறுவனத்துக்கு, நாடு முழுவதிலும், 16 ஆலைகள் உள்ளன. மேலும் தாரளமான நில வசதி உள்ளது. தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றை அமைத்துக்கொள்ள வசதி என, எல்லாம் இருக்கிறது.மேலும், நிறுவனத்தில் 34 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் தொழில்நுட்ப அனுபவமுடைய, 9 ஆயிரம் பொறியியலாளர்களும் உள்னனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)