பதிவு செய்த நாள்
04 மே2020
22:40
புதுடில்லி:பொதுத் துறை நிறுவனமான, ’பெல்’, இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்ளும்படி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, பெல் நிறுவனத்தின் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும்படியும் அழைப்பு விடுத்துள்ளது.
தொற்று நோய் பாதிப்புகளை அடுத்து, பல பன்னாட்டு நிறுவனங்கள், சீனாவை விட்டு வெளியேறி, வேறு இடங்களில் தயாரிப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், ‘பெல்’ இத்தகைய அழைப்பை விடுத்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கவும், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தயாரிப்பை துவங்குவதற்கு ஆதரவளிக்கும் வகையிலும், பெல் நிறுவனம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பை அடுத்து, நிறுவனங்கள் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தங்கள் உற்பத்தியை தொடர்வதில் இருக்கும் ஆபத்தையும், பல முனை வினியோகத்தின் பலனையும் உணர்ந்துள்ளன. இது, இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். வேகமாக வளரும் பொருளாதாரம், முதலீட்டுக்கு ஏற்ற நாடு, ஜனநாயக அரசு, சிறப்பான நீதி பரிபாலன அமைப்பு, உழைப்பதற்கான இளைஞர்கள், போன்றவை இந்தியாவில் இருப்பதால், வெளிநாட்டு நிறுவனங்களை எளிதில் ஈர்க்க முடியும்.
பெல் நிறுவனத்துக்கு, நாடு முழுவதிலும், 16 ஆலைகள் உள்ளன. மேலும் தாரளமான நில வசதி உள்ளது. தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றை அமைத்துக்கொள்ள வசதி என, எல்லாம் இருக்கிறது.மேலும், நிறுவனத்தில் 34 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் தொழில்நுட்ப அனுபவமுடைய, 9 ஆயிரம் பொறியியலாளர்களும் உள்னனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|