பதிவு செய்த நாள்
05 மே2020
23:00
மும்பை:ஜூன் மாதத்துடன் முடிவடையும் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 20 சதவீதம் சரிவைக் காணும்; நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 2 சதவீதமாக இருக்கும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
இதற்கு முன், இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 1 சதவீதம் அதிகமாகவோ, 1 சதவீதம் குறைவாகவோ இருக்கும் என்று கணித்திருந்தது.இது குறித்து, இக்ரா மேலும் தெரிவித்துள்ளதாவது: நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், படிப்படியான தளர்வுகள், பொருளாதார செயல்பாடுகளை மெல்ல அதிகரிக்க உதவுவதாக இருக்கும். இருப்பினும், முக்கிய நகரங்களில் இன்னும் தடை இருப்பது, செயல்பாட்டை குறைப்பதாகவே இருக்கிறது.
தயாரிப்பு, கட்டுமானம், வர்த்தகம், ஓட்டல்கள், போக்குவரத்து ஆகிய துறைகளில் போதுமான அளவுக்கு தொழிலாளர்கள் இல்லாதது, இந்த துறைகளில் வளர்ச்சியை குறைப்பதாக இருக்கிறது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வளர்ச்சி, 16 முதல், 20 சதவீதம் வரை சரிவைக் காணும். நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி, ௧ முதல், ௨ சதவீதமாக சரிவைக் காண்பது தவிர்க்க இயலாததாகும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|