பதிவு செய்த நாள்
05 மே2020
23:34
புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் தங்கம்இறக்குமதி, 99.9 சதவீதம் சரிந்துள்ளது. இது, கடந்த, 30 ஆண்டுகளில் இல்லாத சரிவு. கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் முடக்கப்பட்டதால், தங்க நகைக் கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக, தங்கம் இறக்குமதியும் சரிந்துள்ளது.
கடந்த ஏப்ரலில், 50 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி ஆகியுள்ளதாக தெரிய வருகிறது.இது குறித்து, மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், தங்கத்தின் இறக்குமதி, ஏப்ரல் மாதத்தில், 99.9 சதவீதம் குறைந்துள்ளது. ஊரடங்கால், நகைக் கடைவிற்பனையும் நிறுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக, இறக்குமதியும் இல்லாமல் ஆகிவிட்டது. உலகளவில் இந்தியா, தங்கம் இறக்குமதியில் இரண்டாவது இடம் வகிக்கிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 110.18 டன்தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரலில், வெறும், 50 கிலோதங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வரலாறு காணாத சரிவு இது.தங்கத்தின் மதிப்பு அடிப்படையில் பார்த்தால், கடந்த ஆண்டு இறக்குமதி, 29 ஆயிரத்து, 974 கோடி ரூபாய் என்றிருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரலில் அது, 21.44 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|