பதிவு செய்த நாள்
05 மே2020
23:40
சென்னை:தற்போது, கட்டுமான பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், சிமென்ட், கருங்கற்களை உடைத்து தயாரிக்கப்படும், ‘எம் – சாண்டு’ விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், ஊரகப் பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, அரசு அனுமதி வழங்கிஉள்ளது.இதையடுத்து, 40 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த கட்டுமான பணிகளை மீண்டும் துவங்க, கட்டுமானத் துறையினர் தயாராகிவருகின்றனர்.இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுக்கு முன் இருந்ததை விட, சிமென்ட், எம் – சாண்டு ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:ஊரடங்கு துவங்கும் முன், 50 கிலோ அடங்கிய ஒரு மூட்டை சிமென்ட், 360 முதல், 400 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது ஒரு மூட்டைக்கு, 80 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், சிமென்ட் மூட்டை, 440 முதல், 480 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதேபோன்று, 100 கன அடி, ௧ யூனிட் எம் – சாண்டு, ஊரடங்குக்கு முன், 6,500 ரூபாயாக இருந்தது. இது தற்போது, 7,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, எரி சாம்பல் கற்கள், ஹாலோ பிளாக்குகள், சாலிட் பிளாக்குகள் விலையையும் உயர்த்துவது குறித்து, உற்பத்தியாளர்கள் பேசி வருகின்றனர். தமிழக அரசு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே இதற்கு காரணம் என, உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.தமிழக அரசு தலையிட்டு, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|