ஏப்ரலில் தங்கம் இறக்குமதி வெறும் 50 கிலோ மட்டுமே ஏப்ரலில் தங்கம் இறக்குமதி வெறும் 50 கிலோ மட்டுமே ...  அதலபாதாளத்துக்கு பாய்ந்த சேவைகள் துறை வளர்ச்சி அதலபாதாளத்துக்கு பாய்ந்த சேவைகள் துறை வளர்ச்சி ...
சிமென்ட், ‘எம் –- சாண்ட்’ விலை திடீர் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2020
23:40

சென்னை:தற்போது, கட்டுமான பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், சிமென்ட், கருங்கற்களை உடைத்து தயாரிக்கப்படும், ‘எம் – சாண்டு’ விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், ஊரகப் பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, அரசு அனுமதி வழங்கிஉள்ளது.இதையடுத்து, 40 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த கட்டுமான பணிகளை மீண்டும் துவங்க, கட்டுமானத் துறையினர் தயாராகிவருகின்றனர்.இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுக்கு முன் இருந்ததை விட, சிமென்ட், எம் – சாண்டு ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:ஊரடங்கு துவங்கும் முன், 50 கிலோ அடங்கிய ஒரு மூட்டை சிமென்ட், 360 முதல், 400 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது ஒரு மூட்டைக்கு, 80 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், சிமென்ட் மூட்டை, 440 முதல், 480 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதேபோன்று, 100 கன அடி, ௧ யூனிட் எம் – சாண்டு, ஊரடங்குக்கு முன், 6,500 ரூபாயாக இருந்தது. இது தற்போது, 7,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, எரி சாம்பல் கற்கள், ஹாலோ பிளாக்குகள், சாலிட் பிளாக்குகள் விலையையும் உயர்த்துவது குறித்து, உற்பத்தியாளர்கள் பேசி வருகின்றனர். தமிழக அரசு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே இதற்கு காரணம் என, உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.தமிழக அரசு தலையிட்டு, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)