பதிவு செய்த நாள்
05 மே2020
23:43
மும்பை:நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், சென்செக்ஸ் குறியீடு, அதன் துவக்க நிலை லாபத்தை இறுதியில் இழந்து, சரிவில் முடிவடைந்தது. இதற்கு, நிதி நிறுவன பங்குகள் அதிகம் விற்பனை செய்யப்பட்டது காரணமாக அமைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்தகத்தின் துவக்கத்தில், 810 புள்ளிகள் வரை அதிகரித்தது. இருப்பினும், வர்த்தகத்தின் முடிவில், 261.84 புள்ளிகள் சரிந்து, 31,453.51 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.83 சதவீத இழப்பாகும்.இதே போல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 87.90 புள்ளிகள் சரிந்து, 9,205.60 புள்ளிகள் என்ற நிலைக்கு இறங்கியது. இது, 0.95 சதவீத சரிவாகும்.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் குறியீட்டில், எஸ்.பி.ஐ., நிறுவன பங்குகள், 4 சதவீதம் அளவுக்கு விலை சரிவை சந்தித்தன. இதையடுத்து, பஜாஜ் பைனான்ஸ், ஏஷியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் பேங்க், கோட்டக் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் ஆகியவையும் விலை சரிவை சந்தித்தன.மாறாக, மகிந்திரா அண்டு மகிந்திரா, பவர்கிரிட், ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை விலை உயர்வை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|