‘சிப்காட்’ பூங்காக்களில் 294 நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம்‘சிப்காட்’ பூங்காக்களில் 294 நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம் ...  அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்க முயற்சி:சீனாவிலுள்ள 1,000 நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சு அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்க முயற்சி:சீனாவிலுள்ள 1,000 நிறுவனங்களுடன் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
18 வயது நபரின் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2020
23:06

புதுடில்லி:ரத்தன் டாடா, ‘ஜெனிரிக் ஆதார்’ எனும், மருந்து சில்லரை விற்பனை நிறுவனத்தின், 50 சதவீத பங்குகளை வாங்கி உள்ளார்.

இந்த நிறுவனம், மும்பையைச் சேர்ந்த, 18 வயதாகும் அர்ஜுன் தேஷ் பாண்டே என்பவரால் துவங்கப்பட்டதாகும்.இவரது ஜெனிரிக் ஆதார் நிறுவனம், பிற, ‘ஆன்லைன்’ மருந்து விற்பனை நிறுவனங்களைப் போல அல்லாது, சந்தை விலையை விட மிகவும் குறைவான விலைக்கு மருந்துகளை விற்பனை செய்கிறது.தேஷ் பாண்டேவின் திட்டங்கள் குறித்து, மூன்று, நான்கு மாதங்களுக்கு முன், ரத்தன் டாடா கேட்டறிந்துள்ளார். அதையடுத்து, அந்த நிறுவனத்தின், 50 சதவீத பங்குகளை வாங்கி, பங்குதாரர் ஆகியுள்ளார்.விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, ரத்தன் டாடாவிடமிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\


ரத்தன் டாடாவின் இந்த முதலீடு, அவரது தனிப்பட்ட முதலீடு; டாடா குழுமத்துக்கும், இந்த முதலீட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த நிறுவனத்தை தேஷ் பாண்டே துவக்கி விட்டார். இந்த நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருவாய், 6 கோடி ரூபாய்.இந்த நிறுவனம், ஜெனிரிக் மருந்துகளை, தயாரிப்பாளர்களிடம் நேரடியாக வாங்கி, சில்லரை விற்பனையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதன் மூலம், மொத்த விலை விற்பனையாளர்களின், 16 முதல், 20 சதவீத கமிஷன் மிச்சப்படுவதால், விலை குறைவாக வழங்க முடிகிறது.இன்னும் ஓராண்டில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், 1,000 சிறிய பிரான்சைஸ் மருந்து கடைகளை துவக்க, இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

ரத்தன் டாடாவை பொறுத்தவரை, இது போன்ற, ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனங்களில் முதலீடு செய்வது புதிதான ஒன்றல்ல.இவர் இதற்கு முன், ‘ஓலா, பேடிஎம், ஸ்நாப்டீல், கியூர்பிட், அர்பன் லேடர், லென்ஸ்கார்ட், லிப்ரேட்’ என, பல நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கிறார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)