பதிவு செய்த நாள்
09 மே2020
23:20
புதுடில்லி:முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை
நிறுவனமான, ஜியோ பிளாட்பார்மில், 'பேஸ்புக், சில்வர் லேக்' ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து, ஜெனரல் அட்லான்டிக் நிறுவனமும், முதலீடை மேற்கொள்ள இருப்பதாக
தகவல்கள் வருகின்றன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைs சேர்ந்த, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, ஜெனரல் அட்லான்டிக் நிறுவனம், ஜியோ பிளாட்பார்மில், 850 மில்லியன் டாலர் முதல், 950 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.இது இந்திய மதிப்பில், 6,417 கோடி ரூபாயிலிருந்து, 7,172 கோடி ரூபாய் வரை ஆகும்.
அனேகமாக இந்த மாதத்திலேயே முதலீடுகள் மேற்கொள்ளப்படலாம் என்கிறார்கள்.
அண்மையில், பேஸ்புக் நிறுவனம், ஜியோவின், 9.99 சதவீத பங்குகளை, 43 ஆயிரத்து, 574 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதையடுத்து, ஜியோ பிளாட்பார்மில், தொழில்நுட்ப முதலீட்டு நிறுவனமான, சில்வர் லேக், 5,655.75 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்து, சில்வர் லேக் வசம், ஜியோ பிளாட்பார்மின், 1.15 சதவீத பங்குகள் வரும்.
பேஸ்புக், சில்வர் லேக் ஆகியவற்றை அடுத்து, ஜெனரல் அட்லான்டிக் நிறுவனமும் முதலீடு செய்ய முன்வந்துள்ளது, வணிக உலகில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய முதலீடுகளின் மூலம், குறுகிய காலத்தில், ஜியோ நிறுவனம், தன் சந்தை மதிப்பை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|