பதிவு செய்த நாள்
09 மே2020
23:29
சென்னை:கொரோனா
வைரஸ் பாதிப்பால், 25 சதவீத சில்லரை விற்பனையாளர்கள், தங்களது
தொழிலை மூடக்கூடிய நிலை ஏற்படும்’ என, இந்திய சில்லரை
விற்பனையாளர்கள்
சங்கத் தலைமை நிர்வாக அதிகாரி, குமார் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:நாடு முழுதும், 1.5 கோடிக்கும் அதிகமான சில்லரை விற்பனையாளர்கள் உள்ளனர்.இவர்கள்
வாயிலாக, ஆண்டுக்கு, 4.74 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம்
நடைபெறுகிறது; மேலும், 4.6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பும்
கிடைக்கிறது.இந்தியாவின் நுகர்வுகளில், 40 சதவீதமும்;
உள்நாட்டு உற்பத்தியில்,
10 சதவீதமும் இத்துறையின்
பங்களிப்பாக வழங்கப்படுகிறது.இத்துறையில், தமிழகத்தில் மட்டும், ஆறு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில்,
ஏற்கனவே பொருளாதார நிலை சரிவு காரணமாக, பிப்ரவரி மாதத்தில்,
25
சதவீத வர்த்தகம் குறைந்துள்ளது. தற்போதைய பாதிப்புகளால் இது மேலும்,
15 சதவீதம் வரை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தடையின்
போது அத்தியாவசிய பிரிவில் வராத ஆடைகள், நகைகள், காலணிகள் போன்ற
பொருட்களின் சில்லரை விற்பனை வணிகம், 100 சதவீதம் குறைந்துள்ளது.
மேலும், சில்லரை விற்பனையாளர்களில், 25 சதவீதம் வரை, தங்களது தொழிலை மூடக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.இது
தவிர, வினியோகிப்பதில் ஏற்பட்ட பிரச்னை
காரணமாக, உணவு சில்லரை
விற்பனை, 40 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
சில்லரை
விற்பனையாளர்கள் தொழிலை மேம்படுத்த, வங்கிகள் எந்த நிதியும்
வழங்கவில்லை.
எனவே, சில்லரை விற்பனையாளர்களுக்கு உதவும்
வகையில், அவர்களுக்கு தேவையான நிதி உதவியை வழங்க, அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும். மேலும், நுகர்வுகளை
அதிகரிக்கவும்,
பொருளாதாரத்தை உயர்த்தவும், ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|