பதிவு செய்த நாள்
09 மே2020
23:33
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் இரண்டாம் கட்ட தங்க வெளியீடு, நாளைதுவங்குகிறது.இந்த
இரண்டாம் கட்ட வெளியீட்டில், தங்கத்தின் விலை, 1 கிராமுக்கு, 4,590
ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்து
உள்ளது.இந்த
இரண்டாம் கட்ட தங்க வெளியீடு, நாளை துவங்கி, 15ம் தேதியுடன் முடிவடைகிறது.
ரூ.50 தள்ளுபடி
நடப்பு
நிதியாண்டில், தங்க பத்திரங்களை, ஆறு கட்டங்களாக, ஏப்ரல் முதல்
செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளியிட இருப்பதாக அரசால்
அறிவிக்கப்பட்டு இருந்தது.முதல்கட்ட வெளியீடு, கடந்த ஏப்ரல், 20 – 24ம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, 1 கிராம் தங்கத்தின் விலை, 4,639 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வலைதளம்
அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1
கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய
நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.இதனால், ‘கிரெடிட், டெபிட் கார்டு’ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு
பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 4,540 ரூபாய்க்கு கிடைக்கும்.
ஆவண வடிவம்
வங்கிகள்,
ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச்
சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு
பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது.இதில், தங்கத்தை, ஆவண வடிவில்சேமிக்கலாம். 1கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில்வழங்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|