பதிவு செய்த நாள்
10 மே2020
11:21
‘கொரோனா’ காலத்தில் சிறிய கடைகள் தான், மக்களுக்கு சேவை செய்தன என்பதை, யாராலும் மறுக்க முடியாத உண்மை. ‘ஆன்லைன்’ வந்தபின், பலரும் மறந்திருந்த கிராமத்து கடைகள், மக்கள் மனதில் இன்னும் பல காலத்துக்கு நினைவில் நிற்கும்.மளிகை, எலக்ட்ரானிக், துணிக்கடைகள், ரெடிமேட் என்று, சிறிய அளவில் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு உதவும் விதமாக, ‘பி2பி’ பிளாட்பார்ம்கள் நிறைய வந்து விட்டன.
இந்த, பிசினஸ் 2 பிசினஸில், கடைக்கான பொருட்களை, ஹோல்சேல் கடையில் வாங்குவது போலத்தான். சிலநேரம், பொருட்களை வாங்க, ஆந்திரா, பெங்களூரு, மும்பை, டில்லி, சூரத், அகமதாபாத் என்று செல்ல வேண்டியிருக்கும். அதெல்லாம் தற்போது தேவையில்லை. எந்த ஊர் பொருட்கள் தேவையோ, இது போன்ற இணையதளங்களில், மொத்த விலைக்கு கிடைக்கின்றன. இதுதவிர, கூரியர் மூலமாக கிடைக்கும். மொத்த வியாபாரியாக இருக்கும் பட்சத்தில், உங்கள் கம்பெனியையும் இதில் விற்பனையாளராக பதிவு செய்து கொள்ளலாம். இதுபோன்று செயல்படும் கம்பெனிகளின் இணையதளங்கள்: udaan.com, jumbotail.com, metro.co.in, maxwholesale.in.
ரத்தன் டாடாவின் புதிய முதலீடுரத்தன் டாடா, புதிய ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார். தற்போது, மும்பையை சேர்ந்த, 18 வயது இளைஞர் துவங்கியுள்ள பார்மா ஸ்டார்ட் அப் நிறுவனத்தில், ரத்தன் டாடா கணிசமாக முதலீடு செய்துள்ளார். மக்களுக்கு குறைந்த விலையில் அதிகளவில் மருந்துகளை அளிப்பதே இந்நிறுவனத்தின் பிரதான நோக்கம்.ரத்தன் டாடாவின் இந்த புதிய முதலீடு மூலம், ஜெனரிக் ஆதார் நிறுவனம், அடுத்த ஓராண்டில், நாடு முழுவதும், தற்போது இருக்கும், 30 கிளைகளை, ஆயிரமாக விரிவாக்க செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அடுத்தகட்ட விரிவாக்கத்தில், குஜராத், ஆந்திரா, தமிழகம், டில்லி ஆகிய மாநிலங்களில் கடைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேககங்களுக்கு; sethuraman.sathappan@gmail.com,
www.startupbuisnessnews.com.
மொபைல் போன்: 98204–51259
– சேதுராமன் சாத்தப்பன் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|