பதிவு செய்த நாள்
11 மே2020
22:30
திருப்பூர்:வங்கிகள்
மற்றும், ‘மைக்ரோ பைனான்ஸ்’ நிதி நிறுவனங்களிடம், சிறு கடன்
பெற்றவர்களில் 75 சதவீதத்தினர், மூன்று மாதத் தவணைத்தொகை
செலுத்துவதில் இருந்து விலக்கு
கோரியுள்ளனர்.
ஊரடங்கைஒட்டி, மார்ச் முதல் மே வரை, மூன்று மாதங்களுக்கான கடன் தவணைத்
தொகையைச் செலுத்துவதில் இருந்து, கடன் பெற்றவர்களுக்கு விலக்களிக்க, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. சாலையோர
வியாபாரிகள், நெசவு, தையல் உட்பட
தொழிலாளர்கள் மற்றும் சுய
உதவிக் குழுப் பெண்கள் உள்ளிட்டோர், 5,000 ரூபாயில் துவங்கி,
வங்கிகள் மற்றும், மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து சிறு கடன் பெறுகின்றனர்.
வங்கிகள் மற்றும்,
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தரப்பில் கேட்டபோது, ‘‘ஊரடங்கால்,
வருவாய் குறைந்து, சேமிப்பு கரைந்ததால், இவர்களில் பலரும் கடன் தவணை
செலுத்துவதை தள்ளிவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.‘‘ஏப்.,
துவங்கியபோது, கடன் பெற்றவர்களில், 30 சதவீதத்தினர் மட்டுமே,
இச்சலுகையைக் கேட்டனர். தற்போது,
75 சதவீதம் வரை, இந்தஎண்ணிக்கைஉயர்ந்துள்ளது.‘‘அடுத்த ஆறு மாதங்களில், 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை, புதிய கடனுதவிகளை வழங்க வேண்டிய சூழல் உள்ளது,’’ என்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|