முதலீட்டு அறிவு மட்டும் போதாது முதலீட்டு அறிவு மட்டும் போதாது ...  வாராக் கடன் வங்கி விரைவில் துவங்க திட்டம் வாராக் கடன் வங்கி விரைவில் துவங்க திட்டம் ...
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி மார்ச்சில் 16.7 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2020
21:52

புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்தில், 16.7 சதவீதம் குறைந்துள்ளது. நாடு முடக்கப்பட்டதை அடுத்து, இம்மாதத்தில், சுரங்கம், தயாரிப்பு துறை, மின்சார துறை ஆகியவற்றில் சரிவு ஏற்பட்டதை அடுத்து, தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 16.7 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து, நாடு முடக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மார்ச் மாதத்தின் இந்த ஒரு வார முடக்கத்திலேயே, 16.7 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுவிட்டது.கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 2.7 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தயாரிப்பு துறை வளர்ச்சி, 3.1 சதவீதம் அதிகரித்திருந்தது. நடப்பு ஆண்டு மார்ச்சில், தயாரிப்பு துறை வளர்ச்சி, 20.6 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது.மின்சார உற்பத்தியும் சரிவு கண்டுள்ளது. மதிப்பீட்டு காலத்தில், 6.8 சதவீதம் சரிவு ஏற்பட்டுஉள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில் வளர்ச்சி, 2.2 சதவீதமாக இருந்தது.சுரங்கத்துறையை பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில், வளர்ச்சி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல், 0.8 சதவீதமாக உள்ளது.

தொழில் துறை உற்பத்தி, கடந்த நிதியாண்டில், 0.7 சதவீதம் சரிந்திருந்தது. ஆனால், அதற்கு முந்தைய நிதியாண்டான, 2018 – 19ல், 3.8 சதவீதமாக வளர்ச்சி அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா பரவல் காரணமாக, நாடு முடக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரல் மாதத்தில் இன்னும் அதிகளவில் வளர்ச்சியில் சரிவு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)