வாராக் கடன் வங்கி விரைவில் துவங்க திட்டம் வாராக் கடன் வங்கி விரைவில் துவங்க திட்டம் ...  புதிய முதலீடுகளுக்கு  10 ஆண்டு வரிச்சலுகை புதிய முதலீடுகளுக்கு 10 ஆண்டு வரிச்சலுகை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன உற்பத்தியை துவக்கியது ‘மாருதி சுசூகி’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2020
23:14

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’ அதன் மானேசர் ஆலையில், உற்பத்தியை மீண்டும் துவக்கி உள்ளது.நாடு முடக்கப்பட்டதை அடுத்து, மாருதி சுசூகியின் தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

தற்போது, 40 நாட்களுக்கு பின், ஹரியானாவில் உள்ள, மானேசர் ஆலையில் உற்பத்தியை துவக்கியுள்ளதாக, மாருதி, நிறுவனம் தெரிவித்து உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர், ஆர்.சி. பார்கவா மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த மார்ச், 22ம் தேதி முதல், நிறுவனத்தின் மானேசர், குருகிராம் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது முதல்கட்டமாக, மானேசர் ஆலையில் உற்பத்தி, செவ்வாய் முதல் துவங்கப்பட்டு உள்ளது.


இந்த ஆலை, 75 சதவீத தொழிலாளர்களுடன், ஒரு ஷிப்டில் மட்டும் இயங்கும்.அரசு, இரு ஷிப்டுகளுக்கு அனுமதி தந்து, தேவை அதிகரிக்கும்போது, ஊழியர்கள் எண்னிக்கையும் அதிகரிக்கப்பட்டு இயக்கப்படும்.குருகிராம் ஆலையை உடனடியாக துவக்கும் எண்ணம் இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.ஹரியானா மாநில அரசு, ஏப்ரல் 22ம் தேதியன்றே ஒரு ஷிப்டில் ஆலையை இயக்கிக் கொள்ள மாருதிக்கு அனுமதி வழங்கியது.இருந்த போதிலும், தொடர்ச்சியாக வாகனங்களை தயாரிக்கும் நிலை வரும் போது ஆரம்பிப்பதாக மாருதி தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தியை துவக்கிய, ‘நிஸான்’நாடு முழுதும் உள்ள டீலர்களுக்கு, சென்னை தொழிற்சாலையிலிருந்து, ‘பி.எஸ்., 6’ கார்களை அனுப்பும் பணியை, நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் துவக்கி உள்ளது.இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:நாடு முழுதும் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற மண்டலங்களில் உள்ள, நிஸான் கார் டீலர்களுக்கு, சென்னையில் உள்ள கார் தொழிற்சாலையிலிருந்து, பி.எஸ்., 6 கார்களை அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது; கார்கள் உற்பத்தியும் மீண்டும் வக்கப்பட்டுள்ளது.அரசு அறிவித்துள்ள செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற, அனைத்து ஊழியர்களுக்கும், டீலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)