பதிவு செய்த நாள்
12 மே2020
23:14
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’ அதன் மானேசர் ஆலையில், உற்பத்தியை மீண்டும் துவக்கி உள்ளது.நாடு முடக்கப்பட்டதை அடுத்து, மாருதி சுசூகியின் தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
தற்போது, 40 நாட்களுக்கு பின், ஹரியானாவில் உள்ள, மானேசர் ஆலையில் உற்பத்தியை துவக்கியுள்ளதாக, மாருதி, நிறுவனம் தெரிவித்து உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர், ஆர்.சி. பார்கவா மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த மார்ச், 22ம் தேதி முதல், நிறுவனத்தின் மானேசர், குருகிராம் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது முதல்கட்டமாக, மானேசர் ஆலையில் உற்பத்தி, செவ்வாய் முதல் துவங்கப்பட்டு உள்ளது.
இந்த ஆலை, 75 சதவீத தொழிலாளர்களுடன், ஒரு ஷிப்டில் மட்டும் இயங்கும்.அரசு, இரு ஷிப்டுகளுக்கு அனுமதி தந்து, தேவை அதிகரிக்கும்போது, ஊழியர்கள் எண்னிக்கையும் அதிகரிக்கப்பட்டு இயக்கப்படும்.குருகிராம் ஆலையை உடனடியாக துவக்கும் எண்ணம் இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.ஹரியானா மாநில அரசு, ஏப்ரல் 22ம் தேதியன்றே ஒரு ஷிப்டில் ஆலையை இயக்கிக் கொள்ள மாருதிக்கு அனுமதி வழங்கியது.இருந்த போதிலும், தொடர்ச்சியாக வாகனங்களை தயாரிக்கும் நிலை வரும் போது ஆரம்பிப்பதாக மாருதி தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தியை துவக்கிய, ‘நிஸான்’நாடு முழுதும் உள்ள டீலர்களுக்கு, சென்னை தொழிற்சாலையிலிருந்து, ‘பி.எஸ்., 6’ கார்களை அனுப்பும் பணியை, நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் துவக்கி உள்ளது.இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:நாடு முழுதும் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற மண்டலங்களில் உள்ள, நிஸான் கார் டீலர்களுக்கு, சென்னையில் உள்ள கார் தொழிற்சாலையிலிருந்து, பி.எஸ்., 6 கார்களை அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது; கார்கள் உற்பத்தியும் மீண்டும் வக்கப்பட்டுள்ளது.அரசு அறிவித்துள்ள செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற, அனைத்து ஊழியர்களுக்கும், டீலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|