பதிவு செய்த நாள்
12 மே2020
23:20
மும்பை:இரண்டாவது கட்டமாக கொரோனா தாக்கும் என்ற அச்சத்தால், நேற்று, உலக சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. இது, ஆசிய முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இந்திய பங்குச் சந்தைகளும் சரிவை கண்டன.
நேற்று, மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், 190.10 புள்ளிகள் சரிந்து, வர்த்தகத்தின் இறுதியில், 31371.12 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ், 716 புள்ளிகள் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.இதே போல், தேசிய பங்குச் சந்தையின், நிப்டி குறியீடும், 42.65 புள்ளிகள் சரிந்து, 9196.55 புள்ளிகளில் நிலை பெற்றது.
இது, 0.46 சதவீத சரிவாகும்.நேற்றைய வர்த்தகத்தில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் பங்குகள் விலை, அதிக சரிவை கண்டன. கிட்டத்தட்ட, 6 சதவீதம் அளவுக்கு விலை சரிவை சந்தித்தது இந்நிறுவன பங்குகள்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசை அடுத்து, ஏஷியன் பெயின்ட்ஸ், கோட்டக் பேங்க், எச்.யு.எல்., எச்.டி.எப்.சி., பேங்க், ஓ.என்.ஜி.சி., ஆகிய நிறுவன பங்குகளும் விலை சரிவை சந்தித்தன.மாறாக, என்.டி.பி.சி., பார்தி ஏர்டெல், ஐ.டி.சி., இண்டஸ்இண்ட் பேங்க், பவர்கிரிட் ஆகிய நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|