பதிவு செய்த நாள்
13 மே2020
23:07
புதுடில்லி:கொரோனா பாதிப்புகளுக்கிடையேயும் , கடந்த ஏப்ரல் மாதத்தில், 731 கோடி ரூபாய் அளவுக்கு, தங்க ஈ.டி.எப்., திட்டத்தில் முதலீடுகள் வந்துள்ளன.
கடந்த ஓராண்டாக சிறப்பாக செயல்பட்டு வரும் திட்டங்களில், தங்க ஈ.டி.எப்., திட்டமும்
ஒன்றாகும். கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை இந்த திட்டத்தில், 2,414 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ’ஆம்பி’ வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இத்திட்டத்தில் ஏப்ரல்
மாதத்தில், 731 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவே, இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 195 கோடி ரூபாய் இந்த திட்டத்திலிருந்து வெளியேறியுள்ளது.இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த, 2011ம் ஆண்டிலிருந்தே இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மிகவும் பாதுகாப்பான இந்த திட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா பாதிப்புகளையும் மீறி அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு முக்கிய காரணம், பிற நிதி சந்தைகள் மற்றும் திட்டங்களில் கடுமையான ஏற்ற தாழ்வுகள் காணப்பட்டது. இந்நிலையில், மிகவும் பாதுகாப்பான முதலீடாக தங்கம்
கருதப்பட்டதால், தங்க ஈ.டி.எப்., திட்டங்களில் அதிக முதலீடு வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|