பதிவு செய்த நாள்
13 மே2020
23:17
சிமென்ட் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தியுள்ள நிலையில், இப்பிரச்னையில் தமிழக முதல்வர் தலையீட்டுக்காக கட்டுமானத் துறையினர் காத்திருக்கின்றனர்.
ஊரடங்கில் இருந்து கட்டுமான பணிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிமென்ட் விலையை உற்பத்தியாளர்கள் அதிரடியாக உயர்த்தியதால், கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.டீசல் விலை உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவை விட, பலமடங்கு அதிகமாக, சிமென்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய அளவில், இதில் மத்திய அரசு தலையிட கட்டுமானத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து கட்டுமானத் துறையினர் கூறியதாவது:தமிழக அளவில் அரசு, தனியார் திட்ட பணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து முதல்வரிடம் நேரில் முறையிட நேரம் கேட்டு காத்திருக்கிறோம். முந்தைய காலங்களில், சிமென்ட் விலை உயர்வின் போது, முதல்வராக இருந்த, கருணாநிதி, ஜெயலலிதா, உற்பத்தியாளர்களை அழைத்து பேசி, பிரச்னையை தீர்த்து வைத்தனர்.
அதேபோல, தற்போதும் முதல்வர், இ.பி.எஸ்., தலையிட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. முதல்வர் தலையிட்டால், சிமென்ட் பிரச்னையை எளிதாக கட்டுப்படுத்த முடியும். அப்போது தான் ஊரடங்கால் முடங்கிய இத்துறை செயல்படும் நிலைக்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
-– நமது நிருபர் -–
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|