பதிவு செய்த நாள்
13 மே2020
23:22
மும்பை:பிரதமர் மோடி, 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு பொருளாதார திட்டத்தினை, செவ்வாய் அன்று அறிவித்ததை அடுத்து, நேற்று, பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்டன.மும்பை பங்குச் சந்தை யின், ’சென்செக்ஸ்’ நேற்று, வர்த்தகத்தின் துவக்கத்தில், 1,474.36 புள்ளிகள் அதிகரித்தது.
இருப்பினும், வர்த்தகத்தின் இறுதியில், அந்த நிலையிலிருந்து இறங்கி, 637 புள்ளிகள் உயர்வுடன், 32,008.61 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 2.03 சதவீத உயர்வாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், ’நிப்டி’ 187 புள்ளிகள் அதிகரித்து, 9,383.55 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 2.03 சதவீதமாகும்.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், ஆக்சிஸ் பேங்க் அதிகபட்ச விலை உயர்வை சந்தித்தது. இதையடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை, 7 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.இதைத் தொடர்ந்து, அல்ட்ராடெக் சிமென்ட், எல் அண்டு டி., ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எஸ்.பி.ஐ., மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவன பங்குகளும் விலை உயர்ந்தன.
மாறாக, நெஸ்லே இந்தியா, சன் பார்மா, பார்தி ஏர்டெல், எச்.யு.எல்., ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை சரிவை சந்தித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|