பதிவு செய்த நாள்
14 மே2020
22:29
புதுடில்லி:கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, உலக பொருளாதாரம், நடப்பு ஆண்டில், 3.2 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துஉள்ளது.
இது, 1930ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நிலையை விட மோசமானதாகும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பொருளாதாரம் நடப்பு ஆண்டில், 1.2 சதவீதம் வளர்ச்சியை காணும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவின் தாக்கத்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 8.5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது, கடந்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த லாபத்துக்கு சமமானதாகும்.கடந்த ஜனவரி மாதத்தில், அதாவது கொரோனா பாதிப்புக்கு முன், உலக பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில், 2.5 சதவீதம் வளர்ச்சி காணும் என, கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, 3.2 சதவீதம் சரிவைக் காணும் என தெரிகிறது.மிக அதிகளவிலான கட்டுப்பாடுகள் காரண மாக, பொருளாதார செயல்பாடுகளின் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து விட்டது. இதனால், இரண்டாவது காலாண்டில் எந்த வளர்ச்சியும் இருக்காது.இரண்டாவது முறை வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு, தடை நீட்டிக்கப்படும் பட்சத்தில், மூன்றாவது காலாண்டிலும் பாதிப்புகள் ஏற்பட்டு, உலகப் பொருளாதாரம், 4.9 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|