பதிவு செய்த நாள்
14 மே2020
22:31
சென்னை:பிற நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வரும் தொழிற்சாலைகளுக்கு, இடமாற்ற ஊக்கச் சலுகைகள் வழங்க, தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
உலகளவிலான பல நிறுவனங்கள், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, தங்கள் தொழிற்சாலைகளை, வேறு நாடுகளுக்கு இடம் மாற்றுவது குறித்த முடிவு களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தும் முயற்சியில், இந்தியாவும் இறங்கி உள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு இடமாறும் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி உள்ளது.
வெளிநாடுகளிலிருந்து, தமிழகத்திற்கு இடம்பெயரும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சலுகைகள், வசதிகள் தவிர, இடமாற்ற ஊக்கத்தொகை வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, தமிழக தொழிற்துறை முதன்மை செயலர் என்.முருகானந்தம், மின்னணு துறையை சேர்ந்த பல நிறுவனங்களிடம், தமிழகத்திற்கு இடம் மாறுவதில் உள்ள சாதக அம்சங்களை விளக்கி இருக்கிறார்.
ஜப்பான் முதலீட்டாளர்களுடன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகமும்,இந்திய துாதரகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த காணொலி சந்திப்பில், தமிழகத்தில் இருக்கும் வாய்ப்புகள் குறித்தும், சலுகைகள் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.இந்த சந்திப்பில், பானாசோனிக், டாய்க்கின், டி.டி.கே., கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
தமிழகத்தில் மட்டும், 620க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில், ஜப்பான் நிறுவனங்கள் அதிகளவில் செயல்படும் மாநிலங்களில், தமிழகம் இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|