பதிவு செய்த நாள்
14 மே2020
22:41
புதுடில்லி:நாட்டின் ஏப்ரல் மாத மொத்தவிலை பணவீக்கம் குறித்த தரவுகளை, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, குறிப்பிட்ட சில பிரிவுகளில் மட்டுமே பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதால், முழுமையான மொத்த விலை பணவீக்க தரவுகள் வெளியாகவில்லை.இது குறித்து, வர்த்தக துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா தாக்கம் காரணமாக, அனைத்து பிரிவுகளில் உள்ள தரவுகளையும் வெளியிட முடிய வில்லை.
குறிப்பிட்ட சில பிரிவுகள் மற்றும் உப பிரிவுகளில் கிடைத்த தரவுகள் மட்டுமே வெளியிடப் பட்டுள்ளது.ஏப்ரல் மாதத்தில், முதன்மை பொருட்களின் மொத்தவிலை குறியீட்டு பணவாட்டம், 0.79 சதவீதமாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், முதன்மை பொருட்களின் பணவீக்கம், 3.72 சதவீதமாக இருந்தது.எரிபொருள் மற்றும் மின்சாரத்தை பொறுத்தவரை, பணவாட்டம், 10.12 சதவீதமாக உள்ளது.
மார்ச் மாதத்தில் இப்பிரிவில் பணவீக்கம், 1.76சதவீதமாக இருந்தது.உணவுப் பொருள் பணவீக்கம், மார்ச் மாதத்தில், 5.49 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரலில் குறைந்து, 3.60 சதவீதமாக சரிந்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|