பதிவு செய்த நாள்
14 மே2020
22:43
மும்பை:பல பெரிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.
மேலும், அரசின், 20 லட்சம் கோடி ரூபாய்க்கான சிறப்பு பொருளாதார திட்டத்திலிருந்து, உடனடியாக செலவழிப்பது என்பது ஒப்பீட்டளவில் குறைவாக காணப்படுவதாக முதலீட்டாளர்கள் கருதினர்.மேலும், இதனால் பொருளாதார மறுமலர்ச்சி எப்போது ஏற்படும் என்பது குறித்த சந்தேகமும் அவர்களிடம் ஏற்பட்டு சந்தையை சரித்தது. சென்செக்ஸ், நேற்றைய வர்த்தகத்தில், 855.72 புள்ளி கள் சரிந்து, 31,122.89 புள்ளிகளில் நிலைபெற்றது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 240.80 புள்ளிகள் சரிந்து, 9,142.75 புள்ளிகளில் நிலைபெற்றது.நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், டெக் மகிந்திரா, 5 சதவீத சரிவை சந்தித்தது. இதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி., இன்போசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன.மாறாக, ஹீரோ மோட்டோகார்ப், எல் அண்டு டி., மாருதி, அல்ட்ராடெக் சிமென்ட், சன் பார்மா ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்வை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|