பதிவு செய்த நாள்
15 மே2020
23:05
புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், 1,000 கோடி ரூபாயை, பங்குகளாக மாறாத
பத்திரங்களின் வெளியீட்டின் மூலம் திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், நிர்வாகக் குழு கூட்டத்தை வரும், 20ம் தேதியன்று நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 1,000 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு,
நிறுவனத்தின் நிர்வாகக் குழு கடந்த மார்ச், 27ம் தேதியன்றே அனுமதி வழங்கிவிட்டது.இந்நிலையில், கடந்த வாரம், பத்திரங்களை வெளியிட்டு, 1,000 கோடி ரூபாய் திரட்டும்
திட்டத்தை கைவிட்டு விட்டதாக தெரிவித்தது.
கடந்த, 5ம் தேதியன்று, நிர்வாகக் குழு, பொது பத்திர வெளியீடு மூலமாக திரட்டாமல், தனிப்பட்ட முறையில் திரட்டிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளதாக அறிவித்தது.ஆனால், இரண்டு நாட்கள் கழித்து, 7ம் தேதியன்று, தனிப்பட்ட பத்திர வெளியீட்டு திட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. இதற்கு, இறுக்கமான பணச் சந்தை நிலைமைகளை
காரணம் காட்டியது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.தற்போது மீண்டும், 1,000 கோடி ரூபாய் நிதியை, பங்குகளாக மாற்ற இயலாத பத்திரங்கள் மூலமாக திரட்ட உள்ளதாக தெரிவித்துஉள்ளது.
இந்த பத்திர வெளியீட்டை, 500 கோடி ரூபாய், 300 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் என மூன்று கட்டங்களாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பத்திரங்களை மீட்பதற்கான காலம் முறையே, 2022ம் ஆண்டு செப்டம்பர் 30, நவம்பர் 28, டிசம்பர் 29.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|