பதிவு செய்த நாள்
15 மே2020
23:07
புதுடில்லி:‘கொரோனா பாதிப்பு காரணமாக, உலக பொருளாதாரம், 8.8 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இழப்பை சந்திக்கும்’ என, ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. இது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட, 660 லட்சம் கோடி ரூபாய்.
இது குறித்து, இவ்வங்கியின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுஉள்ளதாவது:உலக பொருளாதாரமானது, கொரோனா பாதிப்பால், 5.8 லட்சம் கோடி டாலரிலிருந்து, 8.8 லட்சம் கோடி டாலர் வரை இழப்பை சந்திக்கும். இது, உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில், 6.4 சதவீதத்திலிருந்து, 9.7 சதவீதம் வரை ஆகும்.
தெற்காசியாவை பொறுத்தவரை, 142 பில்லியன் டாலரிலிருந்து, 218 பில்லியன் டாலர் வரை பொருளாதார இழப்பு இருக்கும். தெற்காசிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி,
3.9 சதவீதத்திலிருந்து, 6 சதவீதம் வரை குறையும்.தெற்காசியாவில், மொத்த உள்நாட்டு
உற்பத்தி குறைவதற்கு, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில், மிக
கடுமையான தடைகள் விதிக்கப்பட்டிருப்பது காரணமாக உள்ளது.
இதேபோல், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார இழப்பு, குறுகிய கால
கட்டுப்பாடுகள் இருக்கும் பட்சத்தில், 1.7 லட்சம் கோடி டாலராகவும்; கட்டுப்பாடுகள்,
6 மாதத்துக்கு நீளும்பட்சத்தில், 2.5 லட்சம் கோடி டாலராகவும் இருக்கும்.சீனா, 1.1 லட்சம் கோடி டாலரிலிருந்து, 1.6 லட்சம் கோடி டாலர் வரையிலான இழப்பை சந்திக்கும்.
இவ்வாறு, ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|