பதிவு செய்த நாள்
15 மே2020
23:09
மும்பை:பங்குச் சந்தைகள், நேற்று பெரிதாக எந்த எழுச்சியும், வீழ்ச்சியும் இன்றி, மிகக் குறைந்த அளவில் புள்ளிகள் சரிந்து, முடிவடைந்தன.
பங்குச் சந்தை ஆய்வாளர்களின் கருத்துப்படி, அரசு அறிவித்த, 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு பொருளாதார திட்டம், தேவையை உடனே அதிகரிக்க உதவாமல் போவதற்கான வாய்ப்பு
இருப்பதாகவும், இதன் தொடர்ச்சியாக, பொருளாதார மறுமலர்ச்சிக்கான வாய்ப்பு அருகில் இல்லை எனவும் முதலீட்டாளர்கள் நினைத்ததால், சந்தை உயரவில்லை என தெரிகிறது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, வர்த்தகத்தின் இடையே, 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, வர்த்தகத்தின் இறுதியில், 25.16 புள்ளிகள் சரிவுடன், 31097.73 புள்ளிகளில்
நிலைபெற்றது. இது, 0.08 சதவீத சரிவாகும்.இதை போலவே, தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டியும், 5.90 புள்ளிகள் சரிந்து, 9136.85 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.06 சதவீத சரிவாகும்.
நேற்றைய வர்த்தகத்தில், மகிந்திரா அண்டு மகிந்திரா, அதிகபட்ச விலை சரிவை கண்டது. இந்நிறுவன பங்குகள், 4 சதவீதம் அளவுக்கு விலை சரிந்தன.
இதையடுத்து, ஆக்சிஸ் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க், ஹீரோ மோட்டோகார்ப், சன்பார்மா, ஐ.சி.ஐ.சி.ஐ., ஆகிய நிறுவன பங்குகளும் விலை சரிந்தன.மாறாக, பார்தி ஏர்டெல், ஏஷியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., – எச்.யு.எல்., ரிலையன்ஸ் ஆகிய நிறுவன பங்குகள், விலை உயர்வை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|