பதிவு செய்த நாள்
19 மே2020
11:06
மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், குறு, சிறு, நடுத்தர நிறுவன பிரிவில், நிறுவனங்கள் பட்டியலிடுவதற்கான கட்டணத்தில், 25 சதவீதத்தை குறைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி, அதன் குருகிராம் ஆலையில், உற்பத்தியை, 57 நாட்களுக்குப் பிறகு, நேற்றிலிருந்து துவங்கி உள்ளது.
ஜியோ பிளாட்பார்மில், ஜெனரல் அட்லான்டிக் நிறுவனம், 6,598.38 கோடி ரூபாயை முதலீடு செய்ததை அடுத்து, ஜியோ பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 67 ஆயிரத்து, 195 கோடி ரூபாயை, ரிலையன்ஸ் திரட்டி உள்ளது.
மீண்டும் வினியோகத்தை துவங்க, அனைத்து மாநிலங்களிலிருந்தும் வரவேண்டிய அறிவிப்புகளுக்காக காத்திருப்பதாக, பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான, ’கெய்ர்ன்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் தீக்ஷித், பதவி விலகி உள்ளார்.
பங்குதாரர்கள், உரிமை பங்குகளை பெற விண்ணப்பிக்கும்போது, 25 சதவீத தொகையையும்; மீதியை, அடுத்த ஆண்டிலும் செலுத்தினால் போதும் என, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நிதிப்பற்றாக்குறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 12 சதவீதமாக இருக்கும் என, டி.பி.எஸ்., பேங்க் கணித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|