பதிவு செய்த நாள்
19 மே2020
11:10
புதுடில்லி: அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த இரு மாதங்களாக தங்கள் முதலீடுகளை பெருமளவில் திரும்ப பெற்றிருந்த நிலையில், நடப்பு மாதத்தின், முதலிரண்டு வாரங்களில், மீண்டும் அதிக முதலீடுகளை செய்துள்ளனர்.
நடப்பு மாதத்தில், முதலிரண்டு வாரங்களில், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில், 17 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையிலிருந்து, 6,883 கோடி ரூபாயையும்; மார்ச் மாதத்தில், 61 ஆயிரத்து, 973 கோடி ரூபாயையும் திரும்ப பெற்றிருந்தனர். அதேபோல், கடந்த பிப்ரவரி மாதத்தில், 1,820 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.மாறாக, இந்த மாதத்தில் கடந்த இரு வாரங்களில், 17 ஆயிரத்து, 363 கோடி ரூபாயை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.
இருப்பினும், இந்த காலகட்டத்தில், கடன் சந்தையிலிருந்து, 18 ஆயிரத்து, 355 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர். கொரோனா பாதிப்புகளிலிருந்து எப்படி இந்தியா வெளியே வருகிறது என்பதை பொறுத்து தான் அன்னிய முதலீடுகள் வரும். இந்தியாவில் கொரோனா எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதையும், அரசும், ரிசர்வ் வங்கியும் எவ்வாறு இப்பிரச்னையை கையாள்கின்றன என்பதையும் அன்னிய முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அதுவரை, முதலீடுகள் உள்ளே வருவதும் வெளியேறுவதும் அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|