பதிவு செய்த நாள்
19 மே2020
11:12
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டு வரும் ஸ்விகி, 1,100 பேரை பணியிலிருந்து விடுவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பால், அடுத்த சில நாட்களில் அனைத்து நகரங்கள், அனைத்து நிலை ஊழியர்கள், தலைமை அலுவலகம் ஆகியவற்றிலிருந்து, 1,100 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர் என, ஸ்விகி தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீஹர்ஷா நேற்று, ‘மஜெட்டி’ மின்னஞ்சல் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:ஸ்விகியை பொறுத்தவரை இன்று சோகமான நாளாகும். எதிர்பாராத விதமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.கொரோனா, நிறுவனத்தை மிக கடுமையாக பாதித்துவிட்டது. இதனையடுத்து மிகவும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூன்று மாத கால சம்பளம் வழங்கப்படும் என, ஸ்விகி தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|