பதிவு செய்த நாள்
19 மே2020
11:14
மும்பை: நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, கடந்த மார்ச் மாதத்தில், 38.81 சதவீதமும்; கடந்த நிதியாண்டில், 8.9 சதவீதமும் சரிந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில், இத்துறையில் ஏற்றுமதி, 13 ஆயிரத்து, 744 கோடி ரூபாய் ஆக குறைந்துவிட்டது. இதற்கு கொரோனா தாக்கமும் பொருளாதார பாதிப்பும் முக்கிய காரணமாகும்.கடந்த நிதியாண்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், 2.51 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இதுவே அதற்கு முந்தைய நிதியாண்டில், 2.76 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி ஆகியிருந்தது.வெட்டி, பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி, மார்ச் மாதத்தில், 45 சதவீதம் சரிந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 12 ஆயிரத்து, 910 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மார்ச்சில், 7,100 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்களே ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.தங்க ஆபரணங்கள், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 6,929 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியிருந்த நிலையில், நடப்பு ஆண்டு மார்ச்சில், 4,152 கோடி ரூபாய் அளவுக்கே ஏற்றுமதி ஆகியுள்ளது.
இருப்பினும், கடந்த நிதியாண்டில், ஆபரணங்கள் ஏற்றுமதி, 3.57 சதவீதம் அதிகரித்திருந்தது. வெள்ளி ஏற்றுமதியைப் பொறுத்தவரை, கடந்த நிதியாண்டில், 105.60 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|