ஆபரணங்கள் ஏற்றுமதி மார்ச்சில் சரிவு ஆபரணங்கள் ஏற்றுமதி மார்ச்சில் சரிவு ... நுகர்வை அதிகரிக்கும் மாயாஜாலமே முதல் தேவை! நுகர்வை அதிகரிக்கும் மாயாஜாலமே முதல் தேவை! ...
பங்குச் சந்தைகளில் சரிவு : சோர்வடைந்த முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2020
11:16

மும்பை: அரசின் சிறப்பு நிதி ஊக்க தொகுப்பு திட்டம், உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறத் தவறியதை அடுத்து, பங்குச் சந்தைகள் நேற்று கடுமையான சரிவைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தையின், ’சென்செக்ஸ்’, 1609 புள்ளிகள் சரிவை சந்தித்தது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை குறைவால், வங்கி மற்றும் வாகன துறை பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. இதனையடுத்து, சந்தையில் சரிவு ஏற்பட்டது.சென்செக்ஸ் நேற்று, 1608.75 புள்ளிகள் சரிந்து, வர்த்தகத்தின் இறுதியில், 30028.98 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 3.44 சதவீத சரிவாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், நிப்டி, 313.60 புள்ளிகள் சரிந்து, 8823.25 புள்ளிகளில் நிலைபெற்றது.

இது, 3.43 சதவீத சரிவாகும்.நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், இண்டஸ்இண்ட் பேங்க் மிக அதிக இழப்பை சந்தித்தது. இந்நிறுவன பங்குகள் விலை, 10 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இதனையடுத்து, எச்.டி.எப்.சி., மாருதி சுசூகி, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ரா சிமென்ட் ஆகிய நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.மாறாக, டி.சி.எஸ்., இன்போசிஸ், ஐடிசி., எச்.சி.எல்., டெக் ஆகிய நிறுவன பங்குகள் விலையேற்றத்தை கண்டன.


கொரோனாவை சமாளிப்பதற்காக, ஊரடங்கை இம்மாதம், 31ம் தேதி வரை நீட்டித்ததை அடுத்து முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் சோர்வடைந்தனர்.மேலும், அரசின் நிதி நடவடிக்கைகள் அவர்களது நம்பிக்கையை பெறத் தவறியதால், சந்தை இறங்கி வருகிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)