பங்குச் சந்தைகளில் சரிவு : சோர்வடைந்த முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் சரிவு : சோர்வடைந்த முதலீட்டாளர்கள் ... நுகர்வை அதிகரிக்கும் மாயாஜாலமே முதல் தேவை! நுகர்வை அதிகரிக்கும் மாயாஜாலமே முதல் தேவை! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
'சாப்ட் பேங்க்' கிலிருந்து வெளியேறினார் ஜாக் மா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2020
11:18

டோக்கியோ :சீனாவை சேர்ந்த, 'அலிபாபா' நிறுவனத்தின் நிறுவனரான, ஜாக் மா, ஜப்பானை சேர்ந்த, சாப்ட் பேங்க் குழுமத்தின் நிர்வாக குழுவிலிருந்து வெளியேறி உள்ளார். நேற்று, சாப்ட் பேங்க் குழுமம், அதன் நிதிநிலை அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக, ஜாக் மா விலகல் குறித்து அறிவித்துள்ளது. இருப்பினும், என்ன காரணத்தினால், ஜாக் மா நிர்வாக குழுவிலிருந்து விலகுகிறார் என்பதை, சாப்ட் பேங்க் தெரிவிக்கவில்லை.

சாப்ட் பேங்க் நிறுவனம், அதன் தவறான முதலீடுகளால் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளது. குறிப்பாக, 'விவொர்க்' போன்ற நிறுவனங்களில் செய்த முதலீடுகளால் தற்போது தடுமாறி வருகிறது. இதனையடுத்தே, ஜாக் மா, இக்குழுமத்தின் நிர்வாக குழுவிலிருந்து வெளியேறி உள்ளார் என சொல்லப்படுகிறது.அலிபாபாவில் குறிப்பிடத்தகுந்த அளவில் முதலீடு செய்துள்ளது, சாப்ட் பேங்க். ஜாக் மா, கடந்த 2007ம் ஆண்டில் அதன் நிர்வாக குழுவில் இணைந்தார்.சீனாவின் மிகப் பெரிய மின்னணு வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவனரான ஜாக் மா, தற்போது, பரோபகாரியாக மாறி, சமூகத்துக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்.

தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், முகக் கவசம், சோதனைக் கருவிகள் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறார்.நேற்று சாப்ட் பேங்க் குழுமம் அதன் நிர்வாக குழுவுக்கு மூன்று புதிய உறுப்பினர்களை அறிவித்துள்ளது. மேலும், 35 ஆயிரத்து, 485 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெற இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)