பதிவு செய்த நாள்
19 மே2020
11:18
டோக்கியோ :சீனாவை சேர்ந்த, 'அலிபாபா' நிறுவனத்தின் நிறுவனரான, ஜாக் மா, ஜப்பானை சேர்ந்த, சாப்ட் பேங்க் குழுமத்தின் நிர்வாக குழுவிலிருந்து வெளியேறி உள்ளார். நேற்று, சாப்ட் பேங்க் குழுமம், அதன் நிதிநிலை அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக, ஜாக் மா விலகல் குறித்து அறிவித்துள்ளது. இருப்பினும், என்ன காரணத்தினால், ஜாக் மா நிர்வாக குழுவிலிருந்து விலகுகிறார் என்பதை, சாப்ட் பேங்க் தெரிவிக்கவில்லை.
சாப்ட் பேங்க் நிறுவனம், அதன் தவறான முதலீடுகளால் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளது. குறிப்பாக, 'விவொர்க்' போன்ற நிறுவனங்களில் செய்த முதலீடுகளால் தற்போது தடுமாறி வருகிறது. இதனையடுத்தே, ஜாக் மா, இக்குழுமத்தின் நிர்வாக குழுவிலிருந்து வெளியேறி உள்ளார் என சொல்லப்படுகிறது.அலிபாபாவில் குறிப்பிடத்தகுந்த அளவில் முதலீடு செய்துள்ளது, சாப்ட் பேங்க். ஜாக் மா, கடந்த 2007ம் ஆண்டில் அதன் நிர்வாக குழுவில் இணைந்தார்.சீனாவின் மிகப் பெரிய மின்னணு வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவனரான ஜாக் மா, தற்போது, பரோபகாரியாக மாறி, சமூகத்துக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்.
தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், முகக் கவசம், சோதனைக் கருவிகள் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறார்.நேற்று சாப்ட் பேங்க் குழுமம் அதன் நிர்வாக குழுவுக்கு மூன்று புதிய உறுப்பினர்களை அறிவித்துள்ளது. மேலும், 35 ஆயிரத்து, 485 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெற இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|