பதிவு செய்த நாள்
20 மே2020
11:15
புதிடில்லி : ‘ரிலையன்ஸ்’ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீடு, நாளை துவங்குகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, 53 ஆயிரத்து, 125 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை பங்குகளை வெளியிட உள்ளது.ஒரு நிறுவனத்தில் ஏற்கனவே பங்குதாரர்களாக இருப்பவர்களுக்கு, சந்தை விலையைவிடச் சலுகை விலையில் பங்கு களை வாங்கும் அழைப்பு தான் பங்குதாரர்களுக்கான உரிமை வெளியீடு என்பது.இந்த உரிமை பங்கு கோரி பங்குதாரர்கள் நாளை துவங்கி, ஜூன், 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கடந்த மாதம், 30ம் தேதியன்று, உரிமை பங்கு வெளியீடு குறித்து அறிவித்த ரிலையன்ஸ், அதன், 15 பங்குகளுக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் வெளியிட இருப்பதாக தெரிவித்தது. முன்னதாக, உரிமை பங்குகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களை தீர்மானிப்பதற்கான பதிவு, 14ம் தேதியன்று மேற்கொள்ளப்படும் என, அறிவித்திருந்தது.இதன் தொடர்ச்சியாக, 15ம் தேதியன்று நிர்வாக குழு கூடி வெளியீட்டுக்கான தேதிக்கு அனுமதி வழங்கியது. தகுதியுடையவர்கள் உரிமை பங்குகள் கோரி, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.பங்கின் விலையை பொறுத்தவரை, ஏப்ரல், 30ம் தேதி விலையிலிருந்து, 14 சதவீதம் தள்ளுபடி செய்து வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு பங்கின் விலை, 1,257 ரூபாய் ஆகிறது.
மொத்தம், 42.27 கோடி பங்குகள் விற்பனைக்கு விடுக்கப்பட இருக்கிறது.பங்குதாரர்கள் விண்ணப்பிக்கும்போது, முதலில், 25 சதவீத தொகையை மட்டும் கொடுத்தால் போதுமானது. மீதி தொகையை, பின்னர் நிறுவனத்தின் அறிவிப்புகளின்படி செலுத்த வேண்டியதிருக்கும். தற்போதைய திட்டத்தின்படி, மீதி தொகை, அடுத்த ஆண்டு செலுத்தும்படியாக இருக்கும் என, தெரிகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|