பதிவு செய்த நாள்
20 மே2020
11:17
மும்பை:முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர், ஆரோக்கிய கண்காணிப்பு நிறுவனமான, ‘எப்.ஒய்.ஐ., ஹெல்த்’ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
நிறுவனங்களுக்கு, பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்கி தரும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமாகும் இந்த, எப்.ஒய்.ஐ., ஹெல்த்.தேவைப்படும் நிறுவனங்களுக்கு, அதன் ஊழியர்கள், உரிமையாளர்கள், விருந்தினர்கள் என அனைவருக்கும் தினசரி கொரோனா தொற்று குறித்த பரிசோதனைகளை இந்நிறுவனம் மேற்கொள்ளும். இந்நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டிருக்கும் கவுதம் கம்பீர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தொடர் பரிசோதனைகள், கண்காணிப்புகள் அவசியம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தில், கம்பீர் எவ்வளவு தொகைக்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
வேலைக்கு சென்று வரும் ஊழியர்கள், ஆரோக்கியம் குறித்து அதிகம் கவலை கொள்வது, தங்களது அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளதாக, இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி யஷ் ராஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|