பதிவு செய்த நாள்
20 மே2020
11:18
புதுடில்லி: நாடு முடக்கப்பட்டதை அடுத்து, மூடப்பட்ட திரைஅரங்கங்கள் இன்னும் திறக்கப்படவில்லை.
அரசின் கட்டுப்பாடுகள் ஒருபக்கம் இருந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பிறகும், ரசிகர்கள் எவ்வளவு துாரம் அச்சமின்றி திரையரங்கு களுக்கு வருவர் என்ற சந்தேகமும் உள்ளது.வைரஸ் தாக்குதலை தவிர்ப்பதற்காக, சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். சினிமா திரையரங்குகளில் இதை பராமரிக்க முடியுமா என்ற சந்தேகம் இன்னும் தீரவில்லை. மேலும், குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில் பாதிப்பு அதிகம் இருக்கும் என, கருதப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி; உலகின் பல நாடுகளிலும் இதுதான் நிலைமை.
இந்நிலையில், துபாயில், அங்குள்ள மிகப் பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றில், அதன் மொட்டை மாடியில், ’டிரைவ் இன் தியேட்டர்’ துவக்கப்பட்டுள்ளது.சமூக இடைவெளியை பாதுகாக்கும் வகையில், காரை விட்டு இறங்காமல், காரிலிருந்தபடியே சினிமாவை கண்டுகளித்து வர வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு காருக்கு இருவர் என்ற எண்ணிக்கையில், அனுமதிக்கபடுகிறார்கள். இருப்பினும், 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் மற்றும், 60 வயதுக்கு மேற்பட்ட வர்கள் ஆகியோருக்கு அனுமதி கிடையாது.இந்தியாவிலும் விரைவில், ’டிரைவ் இன்தியேட்டர்’களுக்கு மீண்டும் வரவேற்பு கூடலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|