பதிவு செய்த நாள்
22 மே2020
11:11
புதுடில்லி : உணவு வினியோக நிறுவனமான, ‘ஸ்விகி’ முதன்முதலாக, மது வகைகளையும் வீடுகளுக்கும் வினியோகம் செய்ய துவக்கியுள்ளது.
முதல்கட்டமாக, ஜார்க்கண்டில் உள்ள, ராஞ்சி நகரில் இந்த சேவை துவக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பிற மாநில அரசுகளுடனும், மதுவை வீடுகளுக்கு வழங்குவது குறித்து, இந்நிறுவனம் பேசி வருகிறது. இந்த சேவை, முதற்கட்டமாக, ஜார்க்கண்ட் தலைநகரான ராஞ்சியில் துவக்கி இருப்பதாகவும், விரைவில், மாநிலத்தில் உள்ள பிற முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், ஸ்விகி தெரிவித்துள்ளது.சட்டத்திற்கு இணங்க, மதுவை வீடுகளுக்கு வினியோகம் செய்வதில், பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்து வருவதாகவும், ஸ்விகி தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் துணை தலைவர் அனுஜ் ரதி கூறியதாவது:கடைகளில் அதிக கூட்டம் சேராமலும், சமூக இடைவெளியை பராமரிக்கவும், ‘ஆன்லைன்’ மூலமாக ஆர்டர் செய்து, வீட்டில் மதுவை பெறுவது உதவிகரமாக இருக்கும்.அரசின் உரிய அனுமதி மற்றும் பிற சான்றிதழ்களையும் சரிபார்த்து உறுதி செய்த பிறகே சில்லரை விற்பனையாளர்களை இணைத்துக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, ‘அமேசான்’ நிறுவனம், அதன் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை, ‘அமேசான் புட்’ எனும் பெயரில், முதன்முதலாக, பெங்களூருவில் துவக்கி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|