பதிவு செய்த நாள்
22 மே2020
11:38
புதுடில்லி : ‘டிஜிட்டல்’ வசதிகளற்ற சில்லரை விற்பனையாளர்களை, டிஜிட்டல் வர்த்தகத்துக்கு மாற்றுவதற்காக, சாம்சங் இந்தியா நிறுவனம், ‘பேஸ்புக்’ உடன் இணைந்துள்ளது.
சில்லரை விற்பனை வர்த்தகர்களை, டிஜிட்டலுக்கு மாற்றும் வகையில், முதல் கட்டமாக, 800 வர்த்தகர்களுக்கு, சாம்சங், பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து பயிற்சிகளை ஏற்கனவே வழங்கி ள்ளன.வரும் வாரங்களில், மேலும் பலருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என, சாம்சங் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சாம்சங் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:இந்த பயிற்சி வகுப்பின் முதல் கட்டமாக, ‘ஆப்லைன்’ சில்லரை விற்பனையாளர்களுக்கு, பேஸ்புக் நிறுவனத்தின் செயலிகளான, ‘பேஸ்புக், மெஸேஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்’ ஆகியவற்றில் இயங்குவது குறித்து பயிற்சிகள் வழங்கப்படும். இதைஅடுத்து, ஆன்லைன் வர்த்தகம் குறித்து பயிற்சிகள் வழங்கப்படும்.சமூக இடைவெளியை பராமரிக்கும் வகையில், வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே பொருட்களை டெலிவரி செய்வது குறித்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
வாடிக்கையாளர்கள், சமூக ஊடகங்கள் மூலம் பொருட்கள் பற்றி அறிந்து, ‘ஆர்டர்’ கொடுத்து, அருகில் இருக்கும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு, பேஸ்புக் உடனான கூட்டு உதவிகரமாக இருக்கும். இதன் மூலம், வாடிக்கையாளர்களும் சில்லரை விற்பனையாளர்களும் டிஜிட்டல் தளத்துக்கு தங்களை மாற்றிக் கொள்ள இயலும்.இவ்வாறு சாம்சங் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|