இனப்பாகுபாடு விளம்பரத்தை வெளியிட்டதா போக்ஸ்வேகன் நிறுவனம்? இனப்பாகுபாடு விளம்பரத்தை வெளியிட்டதா போக்ஸ்வேகன் நிறுவனம்? ...  அமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை அமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை ...
ஜியோவில் தொடர்ந்து குவியும் முதலீடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2020
22:23

புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, கே.கே.ஆர்., 11 ஆயிரத்து, 367 கோடி ரூபாயை, ஜியோ பிளாட்பார்மில் முதலீடு செய்ய உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் கடனை அடைக்கும் முயற்சியில், ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தின் பங்குகளை, பெரிய அளவில் விற்பனை செய்து, நிதி திரட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜியோவின் பங்குகளை தற்போது, கே.கே.ஆர்., வாங்க உள்ளது.இது குறித்த முக்கியமான அம்சங்கள்:

* கே.கே.ஆர்., ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில், 11 ஆயிரத்து, 367 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது

* இந்த முதலீட்டின் மூலம், கே.கே.ஆர்., நிறுவனத்துக்கு, ரிலையன்ஸ் ஜியோவின், 2.32 சதவீத பங்குகள் கிடைக்கும்

* கே.கே.ஆர்., நிறுவனம், ஆசியாவில் மேற்கொள்ளும் மிகப் பெரிய முதலீடு, இதுவேயாகும்

* ஜியோ பிளாட்பார்மில், பெரிய அளவில் முதலீடு செய்யும், ஐந்தாவது நிறுவனமாகும், கே.கே.ஆர்.,

* இதற்கு முன், பேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லான்டிக் ஆகிய நிறுவனங்கள், ஜியோவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன

*இந்த ஐந்து நிறுவனங்கள் மூலமாக, ஜியோ ஈட்டும் மொத்த தொகை, 78 ஆயிரத்து, 562 கோடி ரூபாய் ஆகும்

*கொரோனா பாதிப்புகளையும் மீறி, வெற்றிகரமாக அதிகளவில் நிதி திரட்டும் நிறுவனமாக, ரிலையன்ஸ் மாறி உள்ளது

* கே.கே.ஆர்., நிறுவனம், 1976ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்நிறுவனம், பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது

* இந்நிறுவனம் துவங்கியதிலிருந்து இதுவரை, கிட்டத்தட்ட, 2.27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது

* இந்த ஒப்பந்தத்தை பொறுத்தவரை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி ஆலோசகராக, 'மார்கன் ஸ்டான்லி'யும், சட்ட ஆலோசகராக, 'ஏ.இசட்.பி., அண்டு பார்ட்னர்ஸ்' மற்றும் 'டேவிஸ் போல்க் அண்டு வார்டுவெல்' ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன

* கே.கே.ஆர்., நிறுவனத்துக்கு நிதி ஆலோசகராக, 'டெலாய்ட் டச் தோமட்சு இந்தியா எல்.எல்.பி.,' நிறுவனமும், சட்ட ஆலோசகராக, 'ஷர்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் அண்டு கோ' மற்றும் 'சிம்ப்சன் தாச்சர் அண்டு பார்ட்லெட் எல்.எல்.பி.,' ஆகிய நிறுவனங்களும் செயல்படுகின்றன.

* கே.கே.ஆர்., முதலீடு, பரிவர்த்தனை ஒழுங்குமுறை மற்றும் பிற வழக்கமான ஒப்புதல்களுக்குப் பிறகே முழுமையடையும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)