பதிவு செய்த நாள்
22 மே2020
22:38
புதுடில்லி:ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டி குறைப்பின் பலனை, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
மேலும், வட்டியை குறைப்பதால், வாகனத் துறை போன்ற துறைகளில், தேவை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜன் வதேரா கூறியுள்ளதாவது:ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை, 4.40 சதவீதத்திலிருந்து, 4 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.
இது, கடன் வாங்குபவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சந்தையில் தேவை அதிகரிக்கும்.ரிசர்வ் வங்கி, வட்டியை குறைத்திருப்பதை அடுத்து, வங்கிகள் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொருளாதார மந்தநிலை காரணமாக, வாகன விற்பனை சரிந்து வந்த நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்படவும் விற்பனை சுத்தமாக இல்லாமல் ஆகிவிட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில், பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை, பூஜ்ஜியம் என்ற நிலைக்கு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் விரைவில் பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து, சந்தையில் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளன, வாகன தயாரிப்பு நிறுவனங்கள்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|