பதிவு செய்த நாள்
23 மே2020
00:47
மும்பை:ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால், நேற்று பங்குச் சந்தைகள் சரிவை கண்டன.சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் இல்லாத காரணத்தாலும், வங்கி மற்றும் நிதி நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டதாலும், பங்குச் சந்தைகள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நேற்று 260 புள்ளிகள் சரிந்தது. வர்த்தகத்தின் இடையே, 450 புள்ளிகள் வரை சரிந்து, பின், வர்த்தகத்தின் முடிவில், 260.31 புள்ளிகள் சரிவுடன், 30,672.59 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.84 சதவீத சரிவாகும்.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், வர்த்தக இறுதியில், 67
புள்ளிகள் சரிந்து, 9,039.25 புள்ளிகளில் நிலைபெற்றது.இது, 0.74 சதவீத சரிவாகும்.
நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில், ஆக்சிஸ் பேங்க் அதிகபட்ச விலை சரிவை சந்தித்தது. இந்நிறுவன பங்குகள், 5 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
இதையடுத்து, எச்.டி. எப்.சி., பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எப்.சி., பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகிய நிறுவன பங்குகளின்
விலைகளும் சரிந்தன.
மாறாக, மகிந்திரா அண்டு மகிந்திரா, இன்போசிஸ், ஏஷியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், டெக் மகிந்திரா ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்வை சந்தித்தன.
முன்னதாக, ரிசர்வ் வங்கி, வட்டிவிகித குறைப்பு உள்ளிட்ட பல்வேறு
அறிவிப்புகளை வெளியிட்டது. இருந்தபோதும், வங்கி துறையில், கடன்களை மறுசீரமைப்பது சம்பந்தமான எந்த நிவாரணத்தையும் ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. இது, சந்தைக்கு ஏமாற்றமளித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|