வளர்ச்சி 0.8 சதவீதம் பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு வளர்ச்சி 0.8 சதவீதம் பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு ...  அனில் அம்பானிக்கு 21 நாள் கெடுகடனை செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு அனில் அம்பானிக்கு 21 நாள் கெடுகடனை செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன துறை எழுச்சியடைய 6 ஆண்டு ஆகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2020
22:37

புதுடில்லி:இந்திய வாகன துறை, மீண்டும் விற்பனை உச்சத்தை எட்ட, இன்னும் ஆறு ஆண்டுகள் பிடிக்கும் என, ‘பாஷ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.


வாகன பாகங்கள் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகும் இது.நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்த, ‘பாஷ்’ நிறுவனம், விற்பனை சரியாமல் இதுவரை தாக்குப் பிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில், தேவை, 30 சதவீதம் அளவுக்கு குறைந்துவிடும் என, எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.


மேலும், வாகன துறை விற்பனை, கடந்த நிதியாண்டில், 17 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டதாகவும்; இது இருபது ஆண்டுகளில் காணாத விற்பனை சரிவு என்றும் தெரிவித்து உள்ளது.

சலுகை

இது குறித்து போஷ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சவுமித்ர பட்டாச்சார்யா கூறியதாவது:இப்போது நாம் காண்பது, நம் வாழ்வில் காணாத மிகவும் சவாலான காலகட்டம் ஆகும். அன்மையில், மத்திய அரசு அறிவித்த நிதி ஊக்க திட்டத்தில், வாகன துறைக்கான எந்த சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.


அந்த திட்டத்தில், நுகர்வோர் எதிர்கொள்ளும் துறைகளுக்கு உதவக்கூடிய வகையிலான, தேவையைத் துாண்டும் நடவடிக்கைகள் கூட இல்லை.இந்த துறையானது, ஜி.எஸ்.டி., வரி குறைப்பு, பழைய வாகனங்களை சாலை பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறது.

மீண்டும் உச்சம்


இத்துறையில், வரி விதிப்பு, உலகின் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத வகையில் இங்கு அதிகமாக இருக்கிறது. கொரோனா தாக்கத்துக்கு முன்பிருந்தே இத்துறை பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.இந்தியாவில் இத்துறை மீண்டும் உச்சம் தொட ஆறு ஆண்டுகள் ஆகும் என கருதுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)