வளர்ச்சி 0.8 சதவீதம் பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு வளர்ச்சி 0.8 சதவீதம் பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு ...  இரண்டு மாதங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.4,736 உயர்வு இரண்டு மாதங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.4,736 உயர்வு ...
அனில் அம்பானிக்கு 21 நாள் கெடுகடனை செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2020
22:45

புதுடில்லி:சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக, 5,400 கோடி ரூபாயை, 21 நாட்களுக்கு உள்ளாக செலுத்த வேண்டும் என, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு, பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தை முன்னிட்டு, காணொலி மூலமாக, பிரிட்டன் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சீனாவை சேர்ந்த மூன்று வங்கிகளில் வாங்கிய கடனுக்கு, அனில் அம்பானி தன் பெயரில், ‘பெர்சனல் கேரண்டி’ கொடுத்திருந்தார். அதனால் திருப்பிச் செலுத்தப்படாத கடனை, கேரண்டி கொடுத்த காரணத்தால், அவர் திருப்பிச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு, 21 நாட்கள் கெடுவும் விதித்துள்ளது.


கடந்த 2012ம் ஆண்டு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், சீனாவை சேர்ந்த, தொழில் மற்றும் வர்த்தக வங்கி, சீன மேம்பாட்டு வங்கி, ஏற்றுமதி _ இறக்குமதி வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் கடன் வாங்கியது.இந்த கடன் திருப்பி செலுத்தப்படாத நிலையில், சீன வங்கிகள் நீதிமன்றத்தை நாடின.இதற்கிடையே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், திவால் நடவடிக்கைக்கு சென்றுவிட்டது.

ஏற்றுக்கொள்ளவில்லை

இந்நிலையில், தற்போது அசல், வட்டி ஆகியவற்றை சேர்த்து 5,400 கோடி ரூபாயை செலுத்துமாறு, அனில் அம்பானிக்கு, பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு முன், கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த விசாரணையின்போது, 68 கோடி டாலர் தர வேண்டும் என சீன வங்கிகள் கோரின. அப்போது அனில் அம்பானி, தான் திவாலாகிவிட்டதாகவும், தன்னுடைய சொத்து மதிப்பு பூஜ்ஜியமாகிவிட்டதாகவும் கூறியதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆறு வாரங்களுக்குள்ளாக, 10 கோடி டாலரை செலுத்த வேண்டும் என்று அப்போது தெரிவித்தது.இப்போது அடுத்த கட்ட விசாரணையில், 71.7 கோடி டாலரை, 21 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கட்டுப்படுத்தாது

இது குறித்து ரிலையன்ஸ் தரப்பில், ‘சீன வங்கிகள் கொடுத்த கடனுக்கு அனில் அம்பானி தனிப்பட்ட உத்தரவாதம் எதுவும் அளிக்கவில்லை. எனவே பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு அனில் அம்பானியை கட்டுப்படுத்தாது. ரிலையன்ஸ் கட்டுமானம், ரிலையன்ஸ் எரிசக்தி மற்றும் ரிலையன்ஸ் முதலீடு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம் முகேஷ் அம்பானி முதலீடுகளை குவித்துக்கொண்டிருக்க, அவரது தம்பி அனில் அம்பானி, கடனை அடைக்க திண்டாடிக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல!

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)