பதிவு செய்த நாள்
25 மே2020
00:03
ஆரோக்கிய சஞ்சீவனி மருத்துவ காப்பீடு திட்டத்தை, அனைத்து காப்பீடு நிறுவனங்களும் ஏப்ரல் மாதம் முதல் வழங்க வேண்டும் என, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு பெற வழி செய்யும் இந்த, மருத்துவ காப்பீடு திட்டத்தின் அடிப்படை அம்சங்கள் மற்றும் இதன் பலன்கள் பற்றி பார்க்கலாம்:அடிப்படை பாலிசி: ஆரோக்கிய சஞ்சீவனி மருத்துவ காப்பீடு அடிப்படையான பாலிசியாகும். 1 முதல் 5 லட்சம் வரை காப்பீடு பெற வழி செய்யும் இந்த பாலிசி, 4,000 முதல், 7,500 வரை பிரிமியம் கொண்டது. பிரிமியம் தொகையை தவணையாகவும் செலுத்தலாம். தனிநபர் அல்லது குடும்ப பாலிசியாக எடுத்துக்கொள்ளலாம்.
எளிமையான அம்சங்கள்: இந்த காப்பீடு திட்டத்தின் அம்சங்கள் மிகவும் எளிமையாக அமைந்து உள்ளன. அனைத்து தரப்பினரின் தேவைக்கேற்ற மருத்துவ காப்பீடு திட்டங்கள் சந்தையில் இருந்தாலும், அவற்றின் சிக்கலான அம்சங்கள் சராசரி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. மாறாக எளிய தேர்வுக்கு உதவும் பாலிசியாக இது அமைகிறது.
என்ன பலன்?
மருத்துவ காப்பீடு வசதியை விரிவாக்கும் நோக்கம் கொண்ட இந்த பாலிசி, 18 வயது முதல் 65 வயதானவர்களுக்கு பொருந்தும். மருத்துவமனை சிகிச்சை உள்ளிட்ட செலவுகள் இதன் கீழ் வருகின்றன. ஆயுஷ் சிகிச்சையும் பொருந்தும். எனினும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை இதன் கீழ் வராது.
யாருக்கு ஏற்றது?
இந்த பாலிசியில் சாதகமான, பாதகமான அம்சங்கள் இருந்தாலும், பொதுவாக முதல் முறை காப்பீடு பெறுபவர்களுக்கு இது மிகவும் ஏற்றது என கருதப்படுகிறது. குறிப்பாக சிறிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு இது பொருத்தமாக அமைகிறது. எளிதாக தேர்வு செய்யலாம் என்பது அதிகமானவர்களை காப்பீடு பெற வைக்கும்.
குறைந்த செலவு: அதே நேரத்தில் பெரிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு, இந்த பாலிசி அதிக பலனை அளிக்க வாய்ப்பில்லை என, கருதப்படுகிறது. பெரிய நகரங்களின் மருத்துவ சிகிச்சை செலவு அதிகமாகலாம். ஆனால், இதன் இலக்கு வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில், விரிவான காப்பீடு பலன்களை அளிக்கும் திட்டமாக அமைகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|