பதிவு செய்த நாள்
25 மே2020
00:11
வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ள சூழலில், 'பிரதான் மந்திரி வாய வந்தனா' திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஸ்டேட் வங்கி அண்மையில், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில் ஐந்து முதல் பத்து ஆண்டு முதலீட்டிற்கு, 6.5 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. இதே போல, எச்.டி.எப்.சி., வங்கியும் சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்நிலையில், ஓய்வூதியதாரர்களுக்கான பிரதான் மந்திரி வாய் வந்தனா திட்டம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும், பென்ஷன் திட்டம் என குறிப்பிடப்படும், இதில் ஒரு முறை முதலீடு செய்தால், பாலிசியின் பத்து ஆண்டு காலத்திற்கு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் தொடர்ந்து பலன் கிடைக்கும். 1,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷனாக பெறலாம்.இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் இந்த திட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது, 2023 ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது இதன் வட்டி விகிதம், 7.40 சதவீதமாக அமைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|