பதிவு செய்த நாள்
26 மே2020
00:20
புதுடில்லி:கடந்த, 47 நாட்களில், 11 ஆயிரத்து, 52 கோடி ரூபாயை, ஜி.எஸ்.டி., ரீபண்டு தொகையாக வழங்கி இருப்பதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, நேரடி வரிகள் வாரியம் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஏப்ரல் மாதம், 8ம் தேதியிலிருந்து இதுவரை, 47 நாட்களில், 11 ஆயிரத்து, 52 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ரீபண்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி., செலுத்தி வரும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடையே பணப்புழக்கத்துக்கு உதவும் வகையில் இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், 8ம் தேதி முதல், மே, 24ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 29 ஆயிரத்து 230 ரீபண்டு விண்ணப்பங்களுக்கு நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல், 8ம் தேதியன்று, நிதியமைச்சகம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் வணிகங்களுக்கு உதவும் வகையில், பாக்கி இருக்கும் ஜி.எஸ்.டி., மற்றும் சுங்க வரி ரீபண்டு தொகை வழங்கப்படும் என, தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|